Thursday, November 24, 2011

பெண்கள் பச்சை உடை அணிவதே இதற்குத் தானா?

பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.அவற்றில் ஒன்று.ஒரு பெண்–திருமணமானவர்-பச்சை புடவை உடுத்தி வழியில் சென்றுகொண்டிருக்கிறார்.கல்லூரி மாணவர்கள் மூவர் நின்றிருந்தார்கள்.இளைஞர்களில் ஒருவன்-வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம்-,”யாருக்குடா மச்சி க்ரீன் சிக்னல்?’’

பச்சை கலரில் உடை உடுத்துவது எப்படி சிக்னலாகும்? என்பதுஎனக்கு புரியவில்லை.அக் கலரில் உடை இல்லாமல் யாரும்இருப்பது வாய்ப்பில்லை.அந்த வக்கிரத்தை என்னவென்றுவர்ணிப்பது? திருமணமானவர் ஒருவர் பச்சை நிறத்தில் உடைஉடுத்தினால் அது காதலுக்கான அறிகுறியா?

கருப்பு கலர்,சிவப்பு கலருக்கெல்லாம் ஒவ்வொரு பொருள்கற்பித்துக் கொள்வது பெண்ணை அவமதிக்கும் செயல்.ஒருகிராமத்தில் இரண்டு,மூன்று பேர் ஒரு பெண்ணின் மீது காதல்கொண்டிருக்கும்போது பச்சை நிற உடையை பார்த்தே மூவரும்கடிதம் கொடுப்பார்களா? இல்லை,அப்பெண் விரும்பும் ஒருவர்கண்ணுக்கு மட்டும் அந்த கலர் தெரியுமா?
கிராமத்தில் நேரில் பேச முடியாத பழங்கால காதலுக்கு நிறங்கள்பயன்பட்டிருக்கலாம்.இப்போது செல்போன் யுகம்,அதுவும் நேரில்சந்திப்பதோ ஏன் டேட்டிங் அது,இதுவென்றுபோய்விட்ட்து.இன்னமும் இம்மாதிரியான கலாச்சாரங்களை ஏன்கட்டிக்கொண்டு அழ வேண்டும்.எதில்தான் வக்கிரமென்று அளவேஇல்லையா?

நடந்தால்,அமர்ந்தால்,சிரித்தால்,இன்ன கலரில் உடைஉடுத்தினால் காதல்,காம்ம் என்றுஅடையாளங்கள் வாழ்க்கைமுறையாகிவிட்ட்தால்தான் எய்ட்ஸ்,பால்வினைநோய்கள்,கள்ளக்காதல் போன்ற சீரழிவுகளை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.தேசத்தின் பெரும் சாபம் இது.

மேற்கண்ட இளைஞர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த்துயார்? கல்லூரியில் வரலாறு,இலக்கியம்,அறிவியல் சமூகம் என்றுஎத்தனையோ கற்பிக்கிறோம்.பச்சை நிறத்தில் உடைஉடுத்திவந்தால் ’சிக்னல்’என்று எவர் கற்பித்தார்கள்?

காலம் காலமாக இருந்து வரும் மட்த்தன்ங்களை நம்முடையஇளைஞர்கள் உள்ளத்தில் அழுக்காக சேராமல் விரட்டினால் ஒழிய,அவர்கள் மிக விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டுஅசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பார்கள்.செவ்வாய்கிரகத்தில் குடியேறினாலும் மனம் மட்டும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment