Tuesday, March 8, 2011

லெசிலி ஒர் என்ற ஆய்வளரும் அவாது உளறல்களும்;

லெசிலி ஒர்  என்ற பெண் ஆய்வாளர்    [  கிழக்கு ஆசியா ஆய்வு    டெக்சஸ்
பலகலைக்கழகம்  ]  தேவரடியார்கள் பற்றி ஒரு ஆய்வு நூல் எழுதி
பதிப்பித்துளார்  அவர் அந்நூலில்  கைக் கொண்ட ஆய்வு முறைகள்  முற்றிலும்
கலவெட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.கி பி 650 முதல் கி பி 1300வரையான
காலத்தை அவர் தமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்  அது ஏறக் குறைய
சோழர்கள் காலத்தை  ஒத்து இருக்கிறது மேலும் அவர் ஆய்வுக்கு என்று
கல்வெட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார்  சோழர் காலத்து
கல்வெட்டுகள் மொத்தம் 15,000  / அவற்றில் பதிப்பிக்கப்பட்டு அச்சில்
வந்த்துள்ளவை 1/3 பங்கு ஆகும். அதில் 304   கல்வெட்டுகளை தேர்வு செய்து
அவர் ஆய்வு நடத்தியுள்ளார்  தேவரடியார்கள்  அல்லது அதற்கு இணையான சொற்கள்
கொண்ட கல்வெட்டுகள் மட்டுமே அவரது ஆய்வுக் களமாகும் அதை வைத்து ஆய்வு
செய்து சில முன்னுக்கிபின்முரணான , முடிவுகளுக்கு வந்துள்ளார்  அவரது
முடிவுகள்    1தேவரடியார்கள்  அரண்மனைப் பெண்டிர் ,

மற்றும்
குடும்பப்பெண்டிர்  ஆகியவர்களிடம் இருந்து  வேறுபட்ட வகையினர். ஆனால் தனி
சாதி என்று சொல்லமுடியாது  ??/அப்படி என்றால் என்ன பொருள் ? 2   2
தேவரடியார்கள் என்பது வேறு.  கொவில்களில்   பணிபுரிந்த அடிமைகள்
என்பவர்கள் வேறு   ஆரம்பத்தில் இவ்விதம் இருந்த இவ்வேறுபாடு  சோழர்களின்
பிற்காலத்தில் மறைந்து  இருவரும்  ஒருவரே என்ற நிலைக்கு மாறியது.   3
அரண்மையில் உள்ள மகளிருக்கும் [அரசனின் வைப்பாட்டிகளைக் குறிகிறார் என்று
நினைக்கிறேன்  தேவரடியார்களுக்கும்   தொடர்பு இல்லை  இருவரும் வேறுபட்ட
வகையினர்.  5 கல்வெட்டுகள் தெரிப்விக்கும் செய்திகளின் படி
தேவரடிய்யர்கள்  கோவில்களுக்கு  கொடை வழங்க்கும் அளவிற்கு  செல்வமும்
சிறப்பும் பெற்றிருந்தனர் ஆனால் இந்த் கொடைகளை முற்றிலும்   எந்த
பலனையும் எதிபார்க்காமல் அளிக்கப் பட்ட நன்கொடைகள் என்று கருதிவிட
முடியாது . இந்த கொடைகள் ஒரு வகை ஒப்பந்தம் போன்றவை  கொடையைக் கொடுத்து
கோவில்களிடம் இருந்து  அதற்கு பதிலாக் ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொண்டனர்
அந்த ஏதோ ஒன்று என்ன? அவர் அதை விளக்குவதற்கு தடுமறுகிறார்.. இறைவனுக்கு
அருகாமையில் இருத்தல்  போன்றவற்றிற்காக அவர்கள் கொடை அளிதனர் என்பது
ஏற்றுக் கொள்ளமுடியாத வாதமாகும்.  அதே சமயத்தில்  தேவரடியாரகள்
கோவில்களில் இருந்து பணம் , நிலம் பொன் ஆகியவற்றைப் பெற்றார்கள்
என்பதையும் அவர் மறுக்கவில்லை  ஆனால் அதை எதிர்பார்த்து அவர்கள் கோவில்
பெண்டிராக வரவிலை என்றும் குழப்புகிறார்  அவர்களுக்கு கொடை அளிக்கும்
அளவிற்கு  செலவம் எப்படி வந்தது என்பதற்கு அவர்கள் பிறப்பிலேயே
செல்வந்தர்கள்  ,அவர்கள் பிறந்த வீட்டில் இருந்து வந்தது , கோவில்
பெண்டிர் என்ற  சமூக மேலாண்மையின் காரணமாக கிடைத்தது  , { அதாவது கோவில்
வருமானம் தவிர  ;பல் வேறு வழியில்  என்று பலவிதமாக் குழப்பி
அடிக்கிறார்  , அதற்கு ஒரு பதிலாக கோவிலில் பணிபுரியும் ஆண்களுக்கு
எவ்விதம் செல்வம் வந்து சேர்ந்த்து ? அவ்விதமே  கோவில் பெண்டிருக்கும்
வந்து சேர்ந்த்தது என்று விளக்கம் வேறு அளிக்கிறர். இந்த பதில் இன்னும்
மேலும் ப்ல கேள்விகள் தோன்றுவதற்கு ஏதுவாகிறது. அனால் அவர் கேட்க மறந்த
கேள்வி ஒன்று உண்டு அது கோவிலில் பனிபுரியும் பார்ப்பன குருக்கள் முதல்
மேளம் அடிப்பவர்  நாவிதம் பண்னுபவர் ஈறாக அனைருக்கும் மணம் புரியும்
உரிமை இருந்த்தது ஆனால் தேவரடியார்களுக்குகு மணம் புரியும் உரிமை
கிடையாது,{ விதிவிலக்காக சிலர் மணசெய்து கொண்டிருக்கலாம்} அது ஏன் என்று
கேட்டால்  அவர்களுக்கு செலவ்ம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை
கிடைத்துவிடும்  ஆனால் ஒரு செய்தியில் அவர் தெளிவாக இருக்கிறார் அது .
அவர்கள் தங்களின் உடலை விற்றுப் பிழைக்கவில்லை;  பணத்திற்காக
அரசர்களுக்கு  படுக்கை விரிகவில்லை என்பதே அகும் , அது எவ்வளவு உண்மை
என்பதை  நாம்  ஆயத்தான் வேன்டும்  . அதற்கான கல்வெட்டு  சான்றுகள் இல்லை
என்பதே அவர் சொல்லும் விடையாகும. அவர் மட்டும் அன்று அவரைப் போலவே  சில
ஆய்வளார்களும்  தேவரடியாரகள்  உடலை விற்றுப்பிழைப்பவர் அல்லர் ஏனெனில்
அத்ற்கு  கல்வெட்டு  சான்றுகள் இல்லை என்று  வாதிடுகிறார்கள்
அவர்களுக்கு நமது பதில்  உடலை வீற்றுப் பிழப்பவர்க்ளும் , அதை விலைக்கு
அல்லது தமது சமூகமேலணமையின் காரணமாக அனுபவிப்பவர்க்ளும்  அதைக்
கல்வெட்டில் பதிவு செய்யமாட்டார்கள் என்பதே  அவ்விதம் அவர்கள்
செய்வார்கள் என்று மூடர்கள்  கூட எதிர்பார்க்க மட்டார்கள் அதை நாம் வேறு
வழியில்தான் ஊகித்து அறிய வேண்டும்.  தேவரடியர்களுக்கு எவ்விதம் எல்லாம்
செல்வம் சேர்ந்தது என்பதையும் அவர்கள் கோவிலில் எந்த வேலைகளுக்கு
பயன்படுத்தப் பட்டனர்என்பதையும்  கீழ்க் கணட் கல்வெட்டு செய்திகள் நமக்கு
விளக்கும்  . இது  கும்[பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதுர்
மகாலிங்கசாமி கோவிலின்  வடக்கு சுவரில் காணப் படுகிறது  அதன் சுருக்கம் .
இந்தகோவிலில்  தைப் பூசம், , வைகாசி     திரவாதிரை வரை    மூன்று முறை
ஆரியக்கூத்து ஆடவேண்டும் அதற்கு  அவர்களுக்கு   ஊதியமாக  14 கலம் நெல்
கோவில் கருவூலதிலிருந்து வழங்கப்படும்  இதைஅவர்கள்கோவிலிலமைந்துள்ள
நாடகசாலையில் ஆடவேன்டும்.இதை கோவில் அதிகாரி [சீரங்கமுடையான்
என்றபாராந்தக மூவெந்தாளான் ,கோவில் ஸ்ரீகாரியம், திரமூர் ஊர்சபையினர்,
நகரத்தார்,  கோவில் பணியாட்கள்  [தேவகண்மி} ஆகியோர்  நாடக சாலையி கூடி
முடிஸ்ய்கிறோம்   இதுதன் அந்தகல்வெட்டின் சாரம்  . கோவில்களீல்
நாடகசாலைகள் அமைத்து ஆரியக் கூயத்து , சக்கைகூத்து, ஆகியவை
ஆடுவதும் ,அதற்கு தமிழ் ,ஆரியம்  ஆகியவற்றில் பாடுவதும் அதற்கு
தேவரடியயார்கள் ஆடுவதும் ... அடா அட்டா கண்கொள்ளக் காட்சி இதுதான்
தேவரடியார்கள் செய்த இறைத்தோண்டு  இட்ப்படித்தானவர்கள் பொருள் ஈட்டினர்
அதைத்தான் லெஸ்லி தேவரடியார்கள் தமது சமூகமேலாணமையின் வாயிலாக பொருள்
ஈட்டினர் என்று வாதிடுகிறார்  .9{ தொடரும்}
    {South Indian Inscriptions
Part - III  Miscellaneous Inscriptions From the Tamil Country    XVI.-
Inscriptions of Parakesarivarman (Aditya II Karikala) who took the
head of Vira-Pandya or the Pandya (King)
No. 203 to 204 Nahesvarasvamin temple at Kumbakonam}
Nமேற்கணட் செய்திகளை தொகுத்து கூறினால்  கீழ்க்கணட முடிவுகளை நம் ஒருவாறு
ஊகித்து அறியலாம்
1 சங்க காலத்தில் கோவில்களோ  அல்லது  அதனுடன் இணைந்த தேவரடியாரகளோ
இல்லை   பின்னர் வந்த  களப்பிரர்கள்  சமண சமயத்தவர் என்வே அவர்கள்
காலத்திலும்   தேவரடியாரகள் இருந்திருக்க வாய்ப்பில்லை அதற்கான
சான்றுகளும் இல்லை  . பல்லவர்கள் சமண சமயத்தை விட்டு  சைவ சமயத்தை
தழுவியவுடன் பெரிய கோவில்களைக்  கல்லினால் கட்ட ஆரம்பித்தார்கள் முதன்
முதலில் கற்றளிகள் [ கல்லால் ஆன கோவில்களைக் கட்டியவர்கள் பல்லவர்க்ளே}
அவர்கள் காலத்தில் தான் கோவில் வழிபாட்டில் பெண்கள் ஆடற் பெண்டுகளாகப்
புகுத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் அப்பொழுது கூத்திகள் என்று
அழைக்கப் பட்டனர் இது தொழிற்பெயராகும்  .தேவரடியாரகள் என்ற பெயர்
வழங்கிய்தற்கு கல்வெட்டு சான்றுகள் இல்லை  அடிமை என்ற சொல் பயன்படுத்தப்
பட்வில்லை.
 2 சோழர்கள் காலதில்  தேவரடியாரகள்  ஒரு அமைப்பாக , கோவில்களுடன்
இணந்துவிட்ட அமைப்பாக மறிவிட்டனர். தேவரடியாரகள் என்ற் சொல்லாட்சி எல்லா
கல்வெட்டுகளிலும் காணப் படுகிறது. இது ராசராச சோழன் கால்தில்
வலுப்ப்பெற்ற ஒரு அமைப்பாக மாறியது பல ஊர்களில் இருந்தும் பெண்\களை
தளிச்சேரிக்கு  அழைத்து வந்து தேவரடியாரகள் என்று பெயர் சூட்டி  ஒரு
அமைப்பை ஏற்படுத்தினான் இந்த வகையில் அவன் ஒரு முன்மாதிரி. , ராசராச
சோழன், ரசேந்திரசோழன் காலத்திற்குப்,பிறகு  சோழர்  ஆட்சி
குன்றத்தொடங்கியது. குலோத்துங்கன் காலத்தில் சிறிது நிமிர்ந்து நின்றது
ஆனாலும் அதன் வீழ்ச்சி தொடர்ந்தது. பிற்காலப் பாண்டியர்கள் குறிப்பாக
மாறவர்மன் சுந்த்ர பாண்டியன் சோழ நாட்டின் மீது படை யெடுத்து அதை
முற்றிலுமாக   அழித்தான் . சோழ நாட்டுக் கோவில்களும்  செலவமும்
செல்வாக்கும் இழந்தன. அத்துடன் தேவரடியாரகள்   புகழும் செல்வாக்கும்
வீழ்ச்சி அடைந்தது . கோவில்களின்  பாதுகாப்பு பொய்யாய் ப் போனது தங்களின்
பிழைக்கும் வழிக்காக் அரசர்களையும் நிலக் கிழார்களையும் மட்டும்
நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது .அத்துடன் அவர்கள் தொழிலும்   வேறு
பாதையில் பயணிக்கத் தொடங்கி அதில் மீட்க  இயலாத் மாற்றம் ஏற்பட்டே
விட்டது .
3  தேவரடியாரகள்  அனைவரும் ஒரே தரப் பட்டவர்கள் அல்லர், அவர்களுடைய சமூக
செல்வாக்கும் ஒரே தரப்பட்டது அன்று பெண்களை அடிமைகள்போல் சில
பொற்கசுகளுக்கு   கோவிலகளுக்கு  தேவரடியாரகளாக விற்கப்பட செய்திகளும்
உள்ளன அவர்கள் கால்களில்  திரிசூல முத்திரை இடப்பட்டது ஆனால் அதற்கு
சூட்டுக் கோல் பயன்படுத்தப்படவில்லை என்ற ஆறுதலான செய்தியை  கெ கெ
பியள்ளை அவர்கள்தமது நூலில் பதிவு  செய்து உள்ளார் [ காண்க மேலது} .
மேலும் பெண்களில் சிலர் தங்களையும் தங்களின் மகள் ,பேரன் ,பேத்திகள்
ஆகியபத்துப் பேரை முப்ப்து காசுகளுக் கு விற்றுக் கொண்டாள்.
இரண்டாம்ராசராசசோழன் காலத்தில் திருவாலங்காடுடைய நயனார்கோவிலுக்கு 700
காசுக்கு நான்கு பெண்கள்  தேரவடியர்களாக விற்கப் பட்டனர்  இந்த செய்திகள்
யாவும் கே கே பிள்ளை அவரகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன   [ காண்க
மேலது பக் 340}  டி வி சதசிவப் பண்டாஆத்தார் தமது பிற்கால சொழர் சரிதம்
என்ற நூலில்  அடிமைகளாக கொவிலுக்கு விற்கபாட பெண்கள் மற்றும் ஆண்கள்
பற்றியசெய்தியினை  ஒரு பகுதி முழுவதும் எழுதிஉள்ளார்  [ பொது மக்களும்
சமூக நிலையும்.}இவை யாவும் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவப் பாட
செய்திகளாகும் எனவே வறுமைக்கும் வயிற்றுப் பிழப்புக்கும் கருதியே
அக்காலத்தில் மக்கள்  தெவரடியார்களாக மாறினார்களே அன்றி லெஸ்லியும் அவரது
தமிழ்த்தேசிய நண்ப்[அர்களும்கதைப் போல் கடவுள் பக்தியால் அல்ல என்பது
தெளிவாக் விளங்கும்.
 என்வே தேவரடியார்கள் வேறு தேவதாசிகள் வேறு என்ற வாதம் அடிபட்டுப்
போகிறது.ஒன்று தூய  தமிழ் வ்ழக்கு. மற்றது வடமொழி வழக்கு வேறுபாடு
அவ்வளவு தான். நஞ்சென்றாலும், விடம் என்றாலும்   உடலுக்கு
தீங்கேசெய்யும்'
 ,  அவர்கள் கோவிலுக்கு பெரிய அளவில் கொடை வழங்கினார்கள் என்று
கூறிவிடமுடியாது. கோவிலுக்கு விள்க்கேற்றுவத்ற்கு எண்ணெய்
அளித்தது,அதற்காக் சில ஆடு மாடுகளை நேர்ந்துவிட்டது ,"ஸ்வதி ஸ்ரீ
இதுவும் ஒரு கருங்கற்படிக்கட்டு என்று கோவிலுக்கு சில படிகட்டுகள்
கட்டியது.,தங்களிடம் இருந்த நகைகள் சிலவ்ற்றை கொடுத்தது  இவைத்தவிர
பெரிய  கொடை கொடுத்தாக சன்றுகள் இல்லை. எப்படி இருந்தாலும் அரசன்
அளித்தது போல் பல ஊர்களை கொடையாக அளித்தமைக்கு கல்வெட்டு சன்றுகள் இல்லை
மேலும் பர்ர்ப்னப்,பெண் அளித்த கொடை அவர்கள் குலதின் பெய்ரலே
குறிக்கப்பட்டுள்ளது அது போன்றே அரச மரபினர் கொடுத்த கொடைகளும்
அவர்கள்பெய்ர் ,அரச குலம் என்று குறிக்கப்பட்டுள்ளது பறையர் கொடுத்த
கொடையும் அவ்வித்மே குறிக்கப்,பட்டுள்ளது ஆயின்  தேவரடியாரகள்  கொடுத்த
கொடை அவர்க்ளது குலத்தின் பெய்ரால் குறிக்கப்பெராமல் இன்ன கோவில்
தேவரடியார் அளித்த கொடைஎன்றே குறிக்கப் பட்டுள்ளது இது  உற்று
நோக்கத்தக்கது. இவர்கள்   ஒரு தனிசாதியினர்ராக கருதப்பட்டிருக்கலாம்
அல்லது  அவ்வறு உருவாகக் கூடும் என்ற எண்ணத்தை  தோற்றிவிக்கும் வண்ணமாக்
விளங்குகிறது.
4 கோவிலுக்கு  செய்யும் பணி உரிமை   தேவரடியாரகளுக்கு  பரம்பரையாக
வந்திருக்க வேண்டும் என்று  தோன்றுகிறது, தங்கள்  பணிஉரிமையை பிறருக்கு
விற்கும் உரிமை இருந்தது  அதிலும் யார் முதலில் யார்  பின்னால்  என்ற்
வேற்றுமையும் இருந்தது .திருவிழாக்களின் போது முன்னால் திரை எடுத்தால்
இவர் ஆடவேண்டும் பின்னால் திரை எடுத்தால் இவர் ஆட வேண்டும்
என்றபிரிவினைக் கூட இருந்திருக்கிறது  .பணியில் இருக்கும்போது அவர்
இறந்துவிட்டால்   அல்லது வேறு   நிமித்தமாக் பணியை விட்டு சென்றுவிட்டால்
[ பணீயை விட்டு அயல் நாடுக்ளுக்குசென்றதாகவும் கருதப்,படுகிறது }
அவர்களது நெருங்கிய உறவினர்கள் அப்பணிக்கு நியமிகப்பட்டதை தஞ்சை
தளிச்சேரிக் கல்வெட்டுகள் நமக்குத்தெரிவிக்கின்றன..
எவ்விதம் நோக்கினும்  தேவரடியாரகள்   அரசன் - கோவில்- செலவம் என்ற
முக்கோண்த்தில் சிக்கிய முயல்களாகவே தோன்றுகின்றனர்

No comments:

Post a Comment