Tuesday, March 8, 2011

நகைச்சுவை


நண்பர் – 1 : ஒருவழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு
‘திக்கு திக்கு’ன்னு இருக்கு.
நண்பர் – 2 : ஏன்?
நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே,
ராமு     : ஏண்டா சோகமா இருக்கே?
சோமு : நா ஊர்ல இல்லாத நேரம் பார்த்து, பூட்ட ஒடைச்சி ரூ.50,000-த்த
எடுத்துட்டு போயிட்டிருக்காங்க.
ராமு    : உன்ன யாருடா அவ்ளோ பணத்த பூட்டுல வைக்கச் சொன்னது?
சோமு : ...........!!!

natpu
டாக்டர்   :   டாக்டர்கிட்ட எதையும் மறைக்க கூடாது. காட்டுங்க உங்க பர்ச?

நோயாளி :  பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ச?
*****
அப்பா    :  அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுற?
பையன்  :  போங்கப்பா, உங்கள மாதிரி  என்னால அடி தாங்க முடியாது.
*****
மாணவன் :  செய்யாத தப்புக்கு தண்டன தருவீங்களா சார்?
ஆசிரியர்  :  தரமாட்டேன். ஏன்?
மாணவன் :  நான் வீட்டுப்பாடம் செய்யல சார்.
*****
நீதிபதி         :  நகைய திருடிட்டேனு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி :  அப்டீன்னா திருடின நகைகள நானே வச்சுக்கட்டுமா சாமி
*****
அம்மா   :  என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா
வந்துட்ட?
பையன்   :  எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும்தான் பதில்
சொன்னேன்.
அம்மா     :  (சந்தோசமாக)  என்ன கேள்வி கேட்டாங்க?
பையன்    :  யார்ரா அது? மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சது?ன்னு கேட்டாங்க.
*****
அவர்   :   ஏங்க, பஸ் ஏர்றதுக்கு எங்க நிக்கணும்?
இவர்   :   நடு ரோட்ல நிக்கணும்.
*****
நோயாளி  :  டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்    :  வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
*****
மனைவி  :  ஏங்க கொஞ்சம் வாங்க, கொழந்த அழுவுது.
கணவன்  :  அடியே, உன்ன எவன்டி மேக்கப் இல்லாம கொழந்த பக்கத்துல
போகச் சொன்னது.
*****
போலீஸ்  :  என்ன கபாலி, புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?
கபாலி    :   ஆமா சார், முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியல.


*************************************************************************************************** natpu

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு   :   ஏன் அவன கொன்ன?
புலி            :  அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து
சொல்றான் “எவ்ளோ பெரிய பூன”ன்னு.


*****
மாமா                          : எம் பொண்ணு கொஞ்சம் ‘குண்டு’
மாப்பிள்ளை             : பொண்ணு பேரு என்ன?
மாமா                            :அனு
மாப்பிள்ளை             : அப்போ ‘அணுகுண்டு’ன்னு சொல்லுங்க.
*****

போலீஸ் 1 :  லேடிஸ் கான்ஸ்டபிள்கிட்ட கபாலி வந்து என்னைய்யா
கேட்டான்?
போலீஸ் 2 :   கண்களால் கைது செய்ய முடியுமானு கேட்ருக்கான் சார்!
*****
நண்பன்  1 :   மாப்ள, லவ் மேரேஜ்-க்கும், அரேஞ் மேரேஜ்-க்கும் என்னடா
வித்தியாசம்?
நண்பன் 2 :   அது ஒண்ணுமில்ல மாமு, நம்மலா கெணத்துல விழுந்தா
அது லவ் மேரேஜ், 10 பேரு சேந்து தள்ளிவிட்டா அது அரேஞ்
மேரேஜ்.
*****
அவன்    : ஹலோ என்ன இது? 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தாரீங்க?
இவன்    :  இதான் கடன திருப்பித் தாரது.
*****

விமல்   :   ஒரு நிமிசத்துல 130 பேர் சொல்ல முடியுமா?
கமல்  :   100 முகமது, 9 தாரா, 6 முகம், 7 மலை, 5 சலி, 3 சா,
கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்.
*****
அவர்   :  என்னோட பையன் தான் ஸ்கூல்லயே நம்பர் ஒன்!
இவர்   :  அப்படியா!
அவர்   :  ஆமா, காலைல 7 மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு மொத ஆளா
போய்டுவான்!!
*****
மனைவி :  என்னங்க உங்க பையன் பாடப்புத்தகத்த எப்படி குதறி   
வச்சிருக்கான்னு?
கணவன்    :   நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
*****
**************************************************************************************************

தொண்டன் : தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவன ஏன்
துரத்திட்டீங்க?
தலைவர்  :  பின்ன என்னய்யா, T.V. பொட்டிய காட்டி ‘மானிட்டர்’னு
சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூட தெரியாத
ஒருத்தன்கிட்ட நான் என்னத்த கத்துக்கிறது.
••••••••••
அவர்     :  ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும்?
கொஞ்சம் பெரிசா பாருங்களேன்.
ரூம் பாய்  :  யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு.
•••••••••••
நீதிபதி    :  எதுக்கு அவர ஓட ஓட விரட்டிக் கொல செஞ்ச?
குற்றவாளி:  நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்.
••••••••••••
கணவன்  :  டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா
டாக்டர்   :  இதுக்கு ஏன் கவலபடுறீங்க?
கணவன்  :  அட நீங்க வேற, தனியா நடக்க பயமா இருக்குனு என்னையும்
எழுப்புறா டாக்டர்!
•••••••••
அவன்    :  கிளைமாக்ஸ்ல ஹீரோ துணிக்குள்ள கையவிட்டு ஏதோ
செய்றாரே என்ன அது?
இவன்    :  ம்..... மர்ம முடிச்ச அவிழ்க்கிறாராம்.
•••••
மேனேஜர்  :  எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்
நண்பர்     :  முன் அனுபவம் இருக்கணுமா?
மேனேஜர்  :  ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்ப கொட்டிருந்தா போதும்.
•••••
அவர்      :  தவிச்ச வாய்க்கு தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்   :  உன்ன யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?
••••••••
மனைவி   : என்னங்க சண்ட போடுற மாதிரி கனவு கண்டீங்களா?
கணவன்   :  அது எப்படி உனக்குத் தெரியும்?
மனைவி   :  படுக்க ஈரமா இருந்துச்சே!
••••••
அவர்      :  நீங்க எடுக்கப்போற படத்துக்கு “பிச்சை”-னு பேர் வச்சிருக்கக்
கூடாது சார்?
டைரக்டர்  :  ஏன் சார்?
அவர்      :  நீங்க பிச்சை எடுக்கப் போறதா எல்லாரும் பேசிக்கிறாங்க.
••••••••••
அவள்     :   என் கணவர் தினமும் குடிச்சிட்டு வந்தா நான் பக்கத்துலயே
போகமாட்டேன்.
இவள்     :  அதான் அவர் தினமும் குடிச்சிட்டு வர்றாரா?

No comments:

Post a Comment