Tuesday, March 8, 2011

கலைஞரின் அருமையான திட்டம்....! பாராட்ட பட வேண்டிய திட்டம்...! ஆனால் சுயநல திட்டம்........!

கலைஞருடைய சாதனை விளக்க பொது கூட்டம் என்றால் இரண்டு மணி நேரத்தில் பேசி
முடித்துவிடலாம் (இதில் ஒரு மணி நேரம் முக்கால் நிமிடம் கலைஞரை பற்றி
பாராட்ட வேண்டும்).. ஆனால் சோதனை விளக்க பொது கூட்டம் என்றால் அதனை பேசி
முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என தெரியவில்லை...

'கலைஞரின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டம்' ..... 'மருத்துவ காப்பீடு
திட்டத்தை' தாண்டிய ஒரு அருமையான திட்டம்... ஓலை வீடுகளில்
இருப்பவனுக்கு, அவனுக்கும் நிம்மதியான வாழ்வை காட்டவும், இயற்கையிடம்
இருந்து ஓரளவு தம்மை பாதுகாத்து கொள்ளவும் உருவாக்கிய கலைஞரின் திட்டத்தை
கண்டிப்பாக நாம் பாராட்டியே ஆகவேண்டும்... ஆனால் இந்த திட்டம் நான்கரை
ஆண்டுகளில் வராமல் போனதற்கு என்ன காரணம் என தெரியவில்லை (ஆனால்
சுயசிந்தனையாளர்களுக்கு அவரின் உள்நோக்கம் தெரியும்)... ஒருவேளை இவருக்கு
இப்பொழுதுதான் அந்த சிந்தனை தோன்றி இருக்குமோ என்றால் அதுவும் இல்லை...


'திருடர்கள் முன்னேற்ற கழகத்தின்' கொள்கைகள் "பெரியாரின் திராவிட
கொள்கைகள் + இதில் எந்த கொள்கையையும் கடைபிடிக்க கூடாது" என்பது ஆகும்..
இதில் பெரியாரின் திராவிட கொள்கைகளை எடுத்து கொண்டால், அவருடைய கொள்கைகள்
அனைத்தும் காங்கிரசிற்கு எதிராகவும் கம்யுனிசத்திற்கு ஆதராவாகவும்
இருக்கும்.. அப்படி அவர் கம்யூனிச சிந்தனைகளில் கூறிய ஒன்று தான்
'அனைவருக்கும் சமநிலையில் வீடு'.. அப்படியென்றால் இந்த கலைஞரின் திட்டம்
புதிதாக சிந்திக்கப்பட்ட திட்டமும் அல்ல.. பெரியார் கூறிய காலத்தில்
இருந்த இந்தியாவின் பொருளாதார நிலையில் அப்பொழுது செயல்படுத்துவதென்பது
சாத்தியம் குறைவான ஒன்று... ஆனால் இதற்க்கு பொருளாதார நிலை இந்தியாவிற்கு
இந்தியாவில் உள்ள ஏழை மக்களை மட்டும் சுரண்டி இத்திட்டத்தை
சாத்தியமாக்கும் பொருளாதார நிலை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே
வந்து விட்டது...

இப்படியிருக்க 2005 தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை கலைஞர் கூறி
இருக்கலாம்.. வண்ண தொலைகாட்சி  வழங்கும் திட்டத்தை இப்போது
அறிவித்திருக்கலாம்... இன்னும் நான்கு மாதமே தேர்தல் உள்ள நிலையில்,
கடைசி இரண்டு மாதத்தில் எதுவும் செய்ய முடியாது... இடையில் இருக்கும்
இரண்டு மாத கால அளவில் இவர் இத்திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றுவது
சாத்தியமற்றது (தரமான வீடாக இருந்தால்)...

இவருடைய திட்டம் இழிச்சவாய் தமிழனுக்கு புரிந்தாலும், வீடு தரமானதாக
இருந்தாலும், இத்திட்டம் அனைவருக்கும் சென்றடைந்தாலும், இத்திட்டம்
நிறுத்தபடாமல் இருந்தாலும் நன்றாகவே இருக்கும்..

நான்கரை ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டும், நான்கரை ஆண்டுகளாய் ஆமை வேகத்தில்
செல்லும் மக்கள் நலப்பணிகளும், நான்கரை ஆண்டுகளாய் சேதமடைந்த சாலைகளை
சரிபார்த்தல் பணியும் இனிதே ஒவ்வொன்றாக ஆரம்பித்து விட்டன (சட்ட சபை
உருவான வேகத்தில்)... பேருந்து கட்டண குறைப்பை அடுத்த ஓரிரு மாதங்களில்
எதிர் பார்க்கலாம் (தேர்தல் முடிந்தவுடன் பழைய கட்டணம்தான்)

தமிழ் நாட்டை தமிழன்தான் ஆழ வேண்டும்.. தமிழின் துரோகியும் ஆழ கூடாது..
தமிழின் எதிரியும் ஆழ கூடாது

No comments:

Post a Comment