Saturday, March 26, 2011

தேர்தல் அறிக்கையா...லஞ்ச அறிக்கையா?

கருணாநிதி இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி தருகிறேன் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால், அதற்கு தான் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பதுபோன்று, திமுக அறிவித்துள்ள இலவசங்களுக்கு ஒருபடி மேலே சென்று கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஃபேன் ஆகியவை பெண்களுக்கு தரப்படும் என்று அறிவித்து தமிழக வாக்காளர்களை திகைக்க வைத்துள்ளார் ஜெயலலிதா. 

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதா இந்த தடவைப்போன்றல்லாமல், சுறு சுறுப்பாக கூட்டணியை முடிவு செய்து, தொகுதிப் பங்கீட்டையும் விரைவாக முடித்துக்கொண்டு,தேர்தல் பிரச்சாரத்தையும் முதல் ஆளாக தொடங்கினார். 

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க தோழமை

கட்சிகளாக இருந்ததும், தொகுதி பங்கீடு விரைவாக முடிவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அத்தகைய நிலையில் ஜெயலலிதா முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது, வாக்காளர்களிடம் காணப்பட்ட மனநிலையை வைத்து பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. 

இவ்வாறு கருத்துக் கணிப்பு வெளியிட்ட முன்னணி தமிழ் வார ஏடு ஒன்றை, ஜெயலலிதாவிடம் 'சூட்கேஸ்' வாங்கிவிட்டதாக திமுகவினர் விமர்சித்தனர். 

இதுபற்றி அந்த வார ஏட்டின் கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர், திமுகவினர் கூறும் இந்த குற்றச்சாட்டை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு,"2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டபோது திமுகவினர் எவ்வளவு சூட்கேஸ்கள் தந்தார்கள்? என்று கேட்டு சொல்லுங்கள்" என சூடாக பதிலடி கொடுத்திருந்தது அந்த ஏடு. 

அப்படியான ஒரு நிலையில்தான் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பிரச்சனைகளை நீண்ட இழுபறிக்கு பின்னர் தீர்த்துக்கொண்டு, பிரச்சாரத்தில் தாமதமாக களமிறங்கியது திமுக. 

ஆனால் தாமதமாக களமிறங்கினாலும், பிரச்சாரத்தின் தொடக்க நாளிலேயே கருணாநிதி வெளியிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையும், தமிழக தொலைக்காட்சி ஆடியன்ஸ்களை தமது பிடியில் வைத்துள்ள மாறன் குடும்ப தொலைக்காட்சி, அதனை மக்களிடம் கொண்டு சேர்த்த பிரமாண்ட பிரச்சார யுக்தியும் வாக்காளர்களின் மனதை புரட்டி போட்டது

No comments:

Post a Comment