Friday, December 23, 2011

விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு

ஆனந்த விகடன் பேட்டியில்தான் சிம்பு இப்படி சொல்லியிருக்கிறார்.


விஜய் எல்லாம் மாஸ் நடிப்பை விட்டு இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நண்பன் படத்தில் நடிக்கிறார்.நீங்க ஒஸ்தியில இப்படி மாஸ் ஹீரோவா பழையபடி நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே..விண்ணை தாண்டி வருவாயா படத்துல நடிச்ச மாதிரி சாஃப்டா நடிக்கலாமே ..? என கேட்டதற்கு சிம்பு இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.


விஜய் மாஸ் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு நண்பனில் சாஃப்டாக நடிக்கிறார்.நான் சாஃப்டாக நடிப்பதை விட்டுவிட்டு மாஸ் ஹீரோவாகிட்டேன்.அவர் அங்க போயிட்டார்.நான் இங்க வந்துவிட்டேன்..!

அதாவது விஜய் இடத்துக்கு இவர் வந்துட்டாராம்…ம்..ஒஸ்தியில பத்து கோடி ரூபா நஷ்டம் ஆகிட்டு அப்பா புலம்பிகிட்டு இருக்கார்.,அவர் கண்ல பட்டுடாதீங்க..சிம்பு!

மங்காத்தா படத்தில் அஜீத் அறிமுகம் ஆகிற ஜீப் சீனை ஒஸ்தியில் படமாக்கிய எஸ்.டி.ஆர் தீவிர அஜித் ரசிகர் என்பது தெரிந்ததே.முன்பு இவர் ரஜினி ரசிகராக இருந்தார்.இப்போது விஜய் மீது இன்னும் கொஞ்சம் கொளுத்திப்போடலாம் என்று ,2011 ஆண்டின் சிறந்த படம் மங்காத்தா தான்.அதுக்கு அடுத்து காஞ்சனா அப்புறம் வேலாயுதம் என சொல்லியிருக்கிறார்.

மேட்டர் என்னன்னா தனுஷ் தான் தனக்கு போட்டியாளர்னு சொல்றாங்க.அஜீத்,விஜய் லெவெலுக்கு தன்னை மீடியாக்கள் உயர்த்த மாட்டேங்குதே என்ற கடுப்பில்தான் சிம்பு இப்படியெல்லாம் தத்துவம் பொழிகிறாரா என்னவோ.

No comments:

Post a Comment