Friday, December 2, 2011

பஸ்ஸில் பெண்ணின் காற்சட்டையை வெட்டி பாலியல் தொந்தரவு!!



பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணின் காற்சட்டையை 'பிளேட்' கொண்டு வெட்டி அவருக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டடுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் சம்பவம் நடந்தது என்று பாதிக்கப்பட்ட யுவதி கோட்டை நீதிவான்ⓨமுன்னிலையில் சாட்சியமளித்தார். பயன்படுத்திய 'பிளேட்'டுடன் சந்தேக நபர் உடனடியாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் களுத்துறையைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறினார்.வழக்கை மார்ச் மாதத்துக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment