Friday, December 2, 2011

நோக்கியா என்-9 போனில் முகம் பார்த்து அடையாளும் காணும் வசதி!

சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் நோக்கியா நிறுவனத்தை பற்றி அனைவரும் அறிந்த விஷயமே. இத்தகைய பெயர் பெற்ற நோக்கியாவின் என்-9 மொபைலில் பிஆர்1.1 தொழில் நுட்பத்தை அப்கிரேட் செய்ய உள்ளது.

இந்த புதிய தொழில் நுட்பத்தை பற்றி வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதால் , நிறைய பேர் இந்த தொழில் நுட்பத்தினை அப்டேட்டும் செய்துவிட்டனர்.
மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த போனில் பிஆர்1.1 அப்கிரேடு மூலம் உரிமையாளரின் முகத்தை பார்த்து அடையாளும் காணும் வசதியை இந்த போனில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புதுமையான உணர்வை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். இந்த மொபைலை பயன்படுத்தும் போது இந்த புதிய வசதியின் அருமையை புரிந்துகொள்ள முடியும்.

இதன் உயர்ந்த தொழில் நுட்பம், என்-9 மொபைலுக்கு ஒரு பொலிவான தோற்றத்தை கொடுக்கும். இந்த மொபைலின் முன்புறம் மேனேஜிங் அப்ளிக்கேஷன் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் தொழில் நுட்பத்தில் இன்னும் சில மாறுதல்கள் செய்ய இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. அந்த மாறுதல்கள் நிச்சயம் கூடுதல் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக இருக்கும். அதற்கு உண்டான செயல்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment