Monday, December 5, 2011

தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!



தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!


முன்பே அடிவாங்கிய உன் உறவு தமிழன் எழுதுவது !


சுத்தி சுத்தி தமிழன பார்த்து எல்லா மாநிலத்திலும் ஏன் அடிகிறங்க? 


மனசு கேக்கமா ஆத்தா சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதுனேன் ! பதிலு என்ன வந்துருக்குனு பாருங்க !!!


“என்ன இருந்தாலும் ஒரு இந்தியன் இன்னொரு சக இந்தியன குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு?” ( சோனியா )

... சோனியா ஜி !
இதுக்கொண்ணும் கொறச்சலில்லை… இந்த இந்தியன்… செவ்விந்தியன்கறதெல்லாம் ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் மட்டும்தான் செல்லுபடியாகும்.
மத்த நாளெல்லாம் நம்ம
தமிழனுக “பம்பாய் இந்தியன்” கிட்டயோ….”கர்நாடக இந்தியன்” கிட்டயோ…, கேரளா இந்தியன் கிட்டயோ ,
தர்ம அடி வாங்க வேண்டீதுதான். “
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ மண்ணின் மைந்தர்களை குனிய வச்சு ஆப்பு அடிக்கும் !!!
மத்தவங்களுக்கெல்லாம் தமிழ்நாடு தெறந்த வீடு…
ஆனா..நம்மாளுகளுக்கு மட்டும்தான் சங்கு !!
நீ ஒன்னும் வருத்த படதே ! தமிழா நாம தான் இப்ப யார் தமிழன்கறதுலயே சண்டை போடுறேமே !!!
அதனாலே அடிபட்டவனை தமிழன் இல்லைன்னு சொல்லிருவோம் !
அதுல சில பேரு தமிழன்னு சொன்னா
அது வேற யாரோன்னு நெனச்சுகிட்டு இருக்கான்.
மொத்தத்துல…
உலகம் முழுக்க உதைபட்ட ஒரே இனம் எங்க இனம்தான்னு
நாம ‘நெஞ்ச நிமித்தி’ சொல்லலாம்?
’தமிழ்நாட்டுல தமிழனே மைனாரிட்டி…
தமிழனுக்கு ‘வாங்க’ மட்டுமில்ல.
‘குடுக்கவும்’ தெரியும்னு காட்டுனாப் போதும்.
அதுதான் பிரச்சனைகளுக்கான ஒரே முடிவு...
நான் எழுதுனது உனக்கு வலிசுதுன நீ தமிழன் தான் !!!
இப்படிக்கு .. நொந்து போன தமிழன்

No comments:

Post a Comment