Tuesday, December 20, 2011

கம்பம் அருகே முற்றுகை போராட்டம்: வைகோ, நெடுமாறன் கைது


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டிக்கும் வகையில், அம்மாநிலம் மாநிலம் நோக்கி செல்லும் சாலைகளில் இன்று முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும், புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துகிறது.

இதைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. 

இதன்படி, இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பழ.நெடுமாறனும், வைகோவும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment