Saturday, November 19, 2011

ஒரு முக்கிய அறிவிப்பு !

கடந்த சில தினங்களாக இறைவனின் புனிதமிக்க ஆலயமான காபதுல்லா மீது ஆபாசம் நிறைந்த ஒரு பெண் அமர்ந்திருப்பது போலும், மற்றொரு புகைப்படத்தில் காபதுல்லா மீது பன்றி அமர்ந்திருப்பது போலும் இரண்டு புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானது.அதை கண்டவுடன் பல சகோதரர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் நானும் எனது பங்கிற்கு கடுமையான வாசங்கள் நிறைந்து கண்டனத்தை பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தவுடன், அந்த புகைப்படம் என்னுடைய நண்பர்களுக்கும் சென்றவுடன் சில நண்பர்கள் அதிலேயே கண்டனம் பதிவு செய்திருந்தனர், சில நண்பர்கள் நான் பதிவு செய்ததையே தவறு என்று சுட்டி காட்டினர்.
இதிலிருந்து நமக்கு விளங்குவது அந்த அசிங்கம் கொண்ட போட்டோவை UPLOAD செய்தவன், நாம் எவ்வளவு தூரம் கண்டிக்கிறோம் என்பது அவனுக்கு முக்கியமில்லை எந்த அளவிற்கு பலரால் கண்டிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பபடுகிறது என்ற நோக்கத்திலேயே வெளியிடுகிறான்.

 எனவே சகோதரர்கள் யாவரும் இது மாதிரியான போட்டோவிற்கு SHARE அல்லது COMMENTS எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறது ஏனெனின் நீங்கள் அந்த போட்டோவிற்கு COMMENTS கொடுக்கும் போது உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடுகிறது அந்த மிருகத்தின் நோக்கமும் அதுவே தான் !! நீங்கள் அந்த புகைப்படத்தை காணும் போது உங்களுடைய உணர்சிகளை கட்டுபடுத்தி கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் யா அல்லாஹ் ! உன்னுடைய புனிதமிக்க ஆலயமான காபதுல்லாவை இழிவு படுத்திய மனித மிருகங்களை நாசமாக்குவாயாக !! என்று அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்ls pls

No comments:

Post a Comment