Tuesday, April 12, 2011

எம்.ஜி.ஆரைக் காப்பாற்றச் செய்த தந்திரம் - தி.மு.க ஏமாற்றம்-


சினிமாவில் இருந்த முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை எல்லாம் அழைத்து அதில் உண்மையான ஆட்களை தன் மீது விசுவாசம் கொண்டவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து மெய்காவல்படை போல அமைத்துக்கொண்டார்..எம்.ஜி.ஆருக்கு அரண்போல இவர்கள் காவல் இருந்தனர்...ஸ்டண்ட் மாஸ்டர் ஜஸ்டீன் உட்பட பலர் இருந்தனர்...தளபதி நடராஜன்,சோடாக்கடை பெரியண்ணன் தலமையில் பறக்கும்படை அமைக்கப்பட்ட்து..இன்று ஒரு ஊருக்கு எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்ய வருகிறார் என அறிவித்தால் ,போலீசார்..பந்தோபஸ்து பலமடையும்..பலபோலிஸார் அவரது ரசிகர்கள் என்பதால் அவரது பாதுகாப்பு பணியை உற்சாகமாக செய்தனர்.அதே சமயம்.. அவரை தீர்த்துக்கட்ட தி.மு.க கும்பலும் ஆயுதங்களுடன் அந்த பாதையில் காத்திருப்பார்கள்..ஆனால் எம்.ஜி.ஆர்..சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பாதையில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்துகோண்டிருப்பார்..தி.மு.க வினரை ஏமாற்ற எம்.ஜி.ஆர் பல தந்திரங்கலை உபயோகிப்பார்..சுற்றுப்பயண விவரம் வெறும் ஏட்டளவில்தான் இருக்கும்..நொடிக்கு நொடி தன் பயண திட்ட்த்தை மாற்றிக்கொண்டே இருப்பார்..அந்தளவு தி.மு.கவினர் அச்சுறுத்தல் இருந்தது...





இரவில்..செல்லும்போது இன்னும் போராட்டமாக இருக்கும்..மீடியாக்கள் இல்லாத காலம் என்பதால் மக்கஊக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது..இதனால் பல வன்முரைகளை நட்த்த தி.மு.க வினருக்கு வசதியாக இருந்த்து..போலீஸாரும் இதை அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள்..மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டாலோ..அல்லது நகரத்தில் பலர் முன்னிலையில் நடக்கும் கொலைகளுக்கு மட்டும்தான் போலீஸ் கேச்..இந்த காலத்திலேயே கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பித்தால் போலீஸ் திணறுகிறது. தற்கொலை என கேஸை மூடுகிறார்கள். மீடியாக்கள்.இல்லாத காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்ற லைட் வெளிச்சம் இல்லாத காடுகள் அதிகமுள்ள அக்காலத்தில் (இருபது வருடத்திற்கு முன்).யாரை கொன்றால் யாருக்கு தெரிய போகிறது..?
அப்போது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த நேரம் மக்கள் எம்.ஜி.ஆர் வருகிறார் என தெரிந்தாலே வண்டி கட்டிக்கொண்டு முக்கிய நகர்களுக்கு சாரை சாரையாக வந்துவிடுவார்கள்..எங்க ஊரில் குருசாமி டீக்கடை இருக்கிறது..இந்த கடையில் இரண்டு நாட்களாக டீ,மிகசர் சாப்பிட்டுக்கொண்டு காத்திருந்து எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு போவார்கள்..அப்படி இரண்டு நாட்களாக காத்திருந்து எம்.ஜி.ஆர் பார்த்தவர்கள் கிராமத்தில் இன்றும் நிறைய இருக்கிறார்கள்..இந்த சக்தி உலக அளவில் எந்த தலைவருக்கும் கிடையாது...இரண்டு தின்ங்களாக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால் இன்று வருகிறேன் என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டால் அன்று வரும் வழியெல்லாம் மக்கள் எம்.ஜி.ஆர் வேனை மறித்துக்கொண்டு விடுவர்...100.200 மக்கள் ஒன்றாக சுற்றிக்கொண்டு எங்கள் கிராமத்தில் எம்.ஜி.ஆர் காலடி பட வேண்டும் என அடம்பிடித்தால் அவர் என்ன செய்வார்..?அங்கு இறங்கி அந்த மக்களுடன் சந்தோஷமாக பேசிவிட்டு போவார்..இது போல ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கத்தி கதறுவார்களாம்..உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிடுவாராம்..இதனால் பிரச்சாரத்திற்கு இந்த நாளில் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் வருவதாக சொன்னால் அங்கு வர இரண்டு நாட்கள் ஆகும்...இந்த அளவு எம்.ஜி.ஆர் மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்...

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் முதன்முதலாக போட்டியிட்டபோது வரலாரு காணாத வெற்றி..அவர் கைகாட்டிய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி..எம்.ஜி.ஆர் கைகாட்டினால் கழுதை கூட ஜெயிக்கும் என்பார்கள் கிராமத்தினர்...அந்தலவு எம்.ஜி.ஆரை மக்கள் கடவுளாக மதித்தனர்...

பல சூழ்நிலைகளிலும் எம்.ஜி.ஆரை சுற்றி மக்கள் எப்போதும் இருந்த்தால் தி.மு.க வினர் எம்.ஜி.,ஆரை கொல்லும் முயற்சி பலிக்கவில்லை...ஆனால் வேட்பாளர்கள்..?அவர்களையும் எம்.ஜி.ஆர் காப்பாற்ற வேண்டுமே..? அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் தன் சொந்த கைகாசைபோட்டுத்தான் அப்போது முதல் இன்றுவரை கட்சி பணியாற்றுவார்கள்..

ஆனால் கருணாநிதியோ...நிதி வசதி அதிகம் உள்ளோர் பொற்க்குவியல் தாரீர்..நிதிவசதி குறைந்தோர் காசுகள் தாரீர் என அண்ணா பிறந்த நாள்,தனது பிறந்தநாள்,தேர்தல்காலம் என எப்போது பார்த்தாலும் துண்டு ஏந்தி பிச்சை எடுப்பார்...வசதி மிக்கவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி தருகிறோம்..துண்டு ஏந்தாதீர்கள் என்றாலும் கேட்கமாட்டாராம்...

கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தார் என்கிறார்கள்..இந்த முறை மட்டுமே முழுதாக 5 வருசம் ஆட்சி செய்தார்..மீதி பதவியேற்ற காலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்..இவர் முதல்வர் ஆனாலே கற்பழிப்பு,கொலை கொள்ளை தான்..சிறையில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் விடுதலை செய்வதுதான் இவர் முதல் பணியாக இருக்கும்..ஏனென்றால் ரவுடிகள் என்றாலே அவர்கள் தி.மு.க தானே....இப்போதுகூட..அண்ணா பிறந்த நாள் என பல கொடூரமான ரவுடிகளை திறந்துவிட்டார் தெரியுமா..?இரவில் 7 மணிக்கு மேல் தி.மு.க வின் கோட்டையான சென்னையில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தனியாக நடக்க முடியாது தெரியுமா..?

கலைஞர் அக்காலத்தில்,எத்தனையோ ஸ்டண்டுகள் அடித்தும்,எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை...

தன் தொண்டர்களையும் வேட்பாளர்களையும் தி.மு.க வினர் கொலைவெறியுடன் தாக்கௌகிறார்கள் என கேல்விப்பட்ட்தும் எம்.ஜி.ஆர் ஒரு உத்தரவு பிறப்பித்தார்..உங்கள் வீட்டு கூரையின் மீது நம் கட்சிக்கொடியை ஏற்றுங்கள்...ஒவ்வொருவரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்..உயிருக்கு ஆபத்து என்றால் தாக்குங்கள் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்..என்றார்..எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதும்..அ.தி.மு.கவினர் வெறி கொண்ட வேங்கை ஆகினர்...

தி.மு.க ரவுடிகளை தூக்கி போட்டு மிதித்தனர்...தேர்தல் காலத்தில் அப்போதெல்லாம் வெட்டுகுத்து சர்வ சாதரணம்...வீதிக்கு ஒரு பிணம் விழுமாம்..காரணம் தி.மு.க..காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போக ஆட்சியை இழக்க,முதல் காரணம்,தி,மு,க வின் வன்முரைதான்..காங்கிரஸ்காரன் பெரும்பாலும் அய்யர்தான் என்பதால்.தி.மு.கவால் சுலபமாக அவர்களை உதைத்து துரத்த முடிந்தது...காங்கிரஸ் காரன் வீட்டுக்குள் புகுந்து பெண்களை தூக்கி சென்றுவிடுவார்களாம்...இதனால் வேட்பாளர் பஞ்சம்,பிரச்சாரம் செய்ய பயம் என காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது....மற்றபடி கொள்கை முழக்கமெல்லாம் மண்ணாங்கட்டி வாதம்...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கால் வளர்ந்தார்..தி.மு.க வன்முறையால் வளர்ந்தது....

No comments:

Post a Comment