Sunday, April 10, 2011

நித்தம் 10 கோடி


பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போனால் போதும்… கல்யாண சீர் வரிசையும் வாங்கி, அவர்கள் குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்துவிடலாம்… எல்லாம் ஒரே தெருவில்! குறுகிய தெரு தான்… ஆனால், குபீர் வியாபாரம் கொழிக்கிறது.
சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு! சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வந்தது போல, எப்போது பார்த்தாலும் திருவிழாக் கூட்டம்தான்.
நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக் கடைகள் என்று பெரிய பெரிய கடைகள் ஒருபக்கம் என்றால், செல்போன் கவர், ஹேர் கிளிப், கர்ச்சீப், கீ செயின், பேனா, சாக்ஸ் என்று கைகளில் அடுக்கிக் கொண்டு கூவிக்கூவி விற்கும் தெருவோர கடைகள் இன்னொரு பக்கம்! குண்டூசி தொடங்கி ஏ.சி.மிஷின் வரை இங்கு இல்லாத பொருள்களே இல்லை.பாத்திரக்கடைகளுக்குப் பக்கத்திலேயே பெயர் பொறிக்கும் கடைகள், துணிக்கடைக்குப் பக்கத்திலேயே தையல்கடைகள் என்று உபதொழில் செய்பவர்கள் ஏராளம்.
இப்படி மக்களுக்குத் தேவையானவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் நிறைந்திருக்கும் இதே தெருவில், கரும்புச்சாறு, பழச்சாறுகள், குளிர்பானங்கள், சமோசா, பிஸ்கட் போன்ற பசியாற்றும் பொருட்களை விற்பவர்களும் இருக்கிறார்கள்.

இங்குமட்டும் மக்கள் குவிவதற்கு என்ன காரணம்..? மாம்பலம் ரயில் நிலையத்துக்கும், தி.நகர் பஸ் நிலையத்துக்கும் பக்கத்தில் இந்தத் தெரு இருப்பது தான்.

ரங்கநாதன் தெருவிலுள்ள மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 400

ரு நாளில் ரங்கநாதன் தெருவிற்கு வந்து போவோரின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் பேர். சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், வியாபாரமும் இரு மடங்காகவும், பண்டிகைக் காலங்களில் பத்து மடங்காகவும் இருக்கும்.
ஒரு நாளில் நடக்கும் குறைந்தபட்ச வியாபாரம் 10 கோடி ரூபாய்.

No comments:

Post a Comment