Monday, December 27, 2010

உடையிழந்தார் ஐஸ்வர்யா ராய்

ென்னை வந்த முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் கொண்டு வந்த சூட்கேசை தொலைத்து விட்டு, மாற்று ஆடை இல்லாமல் தவித்தார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்தார் ஐஸ்வர்யா ராய். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது சூட்கேசை தொலைத்து விட்டார். அவர் ‌பங்கேற்க வேண்டி நிகழ்ச்சிக்கு நேரம் ஆகி விட்டதால் என்ன செய்வதென்று தவித்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அணிவதற்காக தான் கொண்டு வந்த ஆடையும் காணாமல் போன சூட்கேஸில்தான் இருக்கிறது என தெரிவித்த அவர், உடனடியாக வேறு ஆடை கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு எடுப்பாக இருக்கும் வகையிலும், மிடுக்கான தோற்றத்தை தரும் வகையிலும் உடையை தேர்வு செய்ய வேண்டும் என்ற டென்ஷனுடன் அவசரமாக டிரஸ் வாங்கப்பட்டது. ஒரு வழியாக புது டிரஸ் போட்டு கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார் அம்மனி. ஆ... ஐஸ்வர்யா என்ன அழகுப்பா... என வழக்கம் போல் எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். பாருங்களேன் அவசரமாக வாங்கின ஆயத்த ஆடை கூட அழகான ஐஸ் போட்டுக் கொண்டதால், அட சூப்பர் டிரஸ் என்று சபாஷை பெற்றுவிட்டது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இத்தனை கலேபரமும் முடிந்த பிறகு அவர் வந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஐஸ்வர்யா ராயை தொடர்பு கொண்ட, உங்கள் லக்கேஜ் கிடைத்து விட்டது, சாரி பார் தி இன்-கன்வீனியன்ஸ் என்று கூலாக சொன்னது என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment