Wednesday, July 6, 2011

மதம் மாறுவாரா நயன்தாரா?

பிரபுதேவாவுக்காக முதல் மனைவி ரம்லத் இந்து மதத்துக்கு மாறியது போல, அடுத்து திருமணம் செய்யப் போகும் நயன்தாராவும் மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1996-ல் முஸ்லிம் பெண்ணான ரம்லத்தை திருமணம் செய்தார் பிரபுதேவா. பின்னர் அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டார், பிரபுதேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக. தன் பெயரையும் லதா என்று மாற்றிக்கொண்டார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார் பிரபு தேவா. இதனால் ரம்லத்துக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு, விவாகரத்து வரை போனது. நாளை அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து அறிவிக்கப்படுகிறது.

நயன்தாராவை அடுத்த மாதம் திருமணம் செய்யப் போகிறார் பிரபுதேவா. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வாரம் தவறாமல் சர்ச்சுக்குப் போகும் வழக்கம் உள்ளவர். குறிப்பாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சர்ச்சுக்குப் போய் வழிபடுவது அவரது நம்பிக்கை.திருமணத்தின் போது, நயன்தாரா இந்து மதத்துக்கு மாறிவிட வேண்டும் என்பது பிரபுதேவா குடும்பத்தினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. திருமணமும் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டும் என தெரிவித்துவிட்டார்களாம்.

இதற்கு நயன்தாரா சம்மதித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. அவர் சம்மதிக்காவிட்டால் முதலில் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, பின்னர் இந்து முறைப்படி திருமணம் செய்வார்களாம்.

No comments:

Post a Comment