
குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அம்மம்மா, அம்மா, அப்பா, பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகள்.
அனைவருக்கும் வருத்தம் என்றில்லை. அம்மம்மாவிற்குத்தான் வருத்தம்.
வீட்டில் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வர முடியாது.
ஓன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்.
காயங்கள் தேடும்.
பொருட்களை உடைக்கும்.

எனவே அனைத்துப் பிரளிகளும் செய்வதற்காக இங்கு கூட்டி வந்திருந்தார்கள்.
பிரஷர் மீட்டரின் பல்பை பிடித்து காற்று அடித்துக் கொண்டிருந்தது ஒன்று.
பரிசோதனைக் கட்டிலை நாட்டிய மேடையாக்கி அக்கறையுடன் பயிற்சி எடுத்தது மற்றொன்று.
வாயிற் கதவுப் பிடியை முறுக்கி ரிப்பயர் செய்து கொண்டிருந்து கடைசி.
சுகர், பிரஸர்,இருதயம் எனப் பலவும் சோதிக்க வேண்டியிருந்தன.
அவவைப் பரிசோதிப்பதற்கு மேலாக
எனக்கு
மூன்று சோடிக் கண்கள் தா இறைவா
என வேண்டிக் கொண்டேன்.

ஏதாவது உடைகிறதா, முறிகிறதா என ஒரே நேரத்தில் அவதானிக்க!
மருந்தறையில் குழந்தைகளின் கூப்பாட்டு சத்தத்தில் எனது வேண்டுதல் இறைவன் காதில் விழவே இல்லை.
நான் சற்றுத் திரும்பி எடை பார்க்கும் கருவியை எடுத்து அதில் அம்மம்மாவை ஏற்றி எடை பார்க்க முயன்றேன்.
திடீரென சைலன்ஸ் பீரியட் பெல் அடித்தது போல சத்தங்கள் அடங்கி அமைதி குடிகொண்டது.
எல்லோர் கண்களும் திரும்பி அம்மம்மாவற்கு நடப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன.
எடை பார்த்து முடிய அம்மம்மா Weighing Scale லிருந்து இறங்கினா?

பாடசாலை விடும் கடைசி பெல் அடித்தது போன்று பல்வேறு ஸ்தாதியில் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை அடக்க எழுந்தன.
'நானும் பார்க்கப் போறன்.'
'என்னை முதலில் விடு.'
' இறங்கு கெதியா இல்லாட்டல் பல்லை உடைப்பன்'
ஓசைகளின் அமர்க்களத்தில் ஒரு சிலதான் காதில் விழுந்தன.
எல்லோரது எடைகளும் பார்த்து முடிய Weighing scaleஅனுங்கியது
அம்மமாவின் எடை 50 கிலோ. அதனை பதிந்த கொண்டே 'உங்கடை நிறை சரியாக இருக்கு என்ற போது,
'அப்ப என்ரை வயசுக்கு நிறை எவ்வளவு இருக்க வேண்டும்'
என்று கேட்டாள் மகள்.
'அம்மம்மாவிற்கு வயது 70. நிறை 50 கிலோ.
உங்கடை வயது 35 இருக்கும்.
அப்ப நிறை அரைவாசிதானே. 25' என்றேன்
கிண்டல் வெளிவராத தொனியில்.
'சும்மா பகடி விடாதயுங்கோ டொக்டர். 10 வயது மகளுக்கே 25க்கு மேலை'
புரிய வைப்பதற்காக சொன்ன பகடிதானே.
'15 16வயது வரைதான் வயசுக்கு ஏற்ற எடை பார்க்கிறது.
அப்பவும் அவர்களுடைய உயரத்தையும் கவனத்தில் எடுப்போம். வளர்ந்தவர்களுக்கு அவர்களது உயரத்திக்கு ஏற்பவே எடை பார்க்க வேண்டும்'
உண்மையில் உடையை விட உடற்திணிவையே இப்பொழுது(Body mass index) முக்கியமாகக் கவனத்தில் எடுக்கிறார்கள்.
உங்கள் உடற் திணிவு எவ்வளவு,
அது சரியானதா, கூடியதா, குறைவா
என அறிய இங்கே
|
No comments:
Post a Comment