Wednesday, December 29, 2010

இனி இந்தியா முழுக்க லோக்கல் தான்

தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன்களில் இனி எஸ்டிடி கட்டண முறையே (Subscriber Trunk Dialling – STD) இல்லாமல் செய்யப் போகிறது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.

இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து அழைப்புகளையும் இனி லோக்கல் கட்டணத்தில் இன்டர் ஸடேட் அழைப்புகளாக மாற்றப் போவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
 முதல் கட்டமாக இன்று (டிசம்பர் 1) அனைத்து வில் போன்களிலிருந்தும் (WLL) 1 ரூபாய் கட்டணத்தில் மூன்று நிமிடங்கள் பேசிக் கொள்ளும் வசதி அறிமுகமாவதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் (பெங்கால்) சவும்யா ராய் அறிவித்துள்ளார். எஸ்டிடி கோட் எல்லாம் அதேதான். ஆனால் எஸ்டிடி கட்டணம் கிடையாது. 1 ரூபாய்க்கு டெல்லிக்கும் பேசலாம்… அதைத் தாண்டியும் பேசிக்கொள்ளலாம்.

அதே நேரம் லேண்ட்லைனிலிருந்து செல்போனுக்கு அழைத்தால் 1 நிமிடத்துக்கு ரூ 1 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இதுவரை லேண்ட்லைன் இணைப்பு பெறுவோர், எஸ்டிடிக்கென்று தனியாக எழுதிக் கொடுக்க வேண்டும். இனி அதற்கான அவசியம் இல்லை. இனி அனைத்து லேண்ட்லைன்களுக்கும், இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
பிஎஸ்என்எல் இந்த அதிரடி முடிவுக்கு வர முக்கியக் காரணம், தரைவழி இணைப்பில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதுதான். தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 35000 இணைப்புகளை துண்டித்துக் கொண்டுள்ளனர் வாடிக்கையாளர்கள். பெங்கால் வட்டத்தில் இது 40000!
இந்த புதிய அறிவிப்பு மூலம் லேண்ட்லைன் துண்டிக்கப்படுவது பெருமளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்லின் இந்த முடிவு மற்ற தனியார் துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதே எஸ்டிடி கட்டணத்தின் அடிப்படையில்தான். தற்போது அவை கட்டாயமாக இந்தக் கட்டணத்தைக் குறைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை பிஎஸ்என்எல் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment