Wednesday, December 29, 2010

அரசாங்கத்தின் இலவசப் பட்டியலின் நீளம் இப்படிப் போகிறது

தமிழக கிராம, நகர்புறங்களில், படிப்பறிவற்ற பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், கருவிலேயே குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம், “அயோடின்’ சத்து குறைவு. இதை தவிர்க்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில், “அயோடின்’ உப்பு பாக்கெட் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உப்பை பயன்படுத்தினால், கருச்சிதைவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு மூளை, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். 

கருச்சிதைவை தடுக்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில் “அயோடின்’ உப்பு, நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இளம் பெண்களுக்கு “சானிடரி நாப்கின்’ ஆகியவை இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

ஊனமுற்ற குழந்தை பிறப்பு தவிர்க்கப்படும். இத்திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அடுத்த இலவசம்: “சானிடரி நாப்கின்’ பயன்படுத்தாததால், கிராமப்புற இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க, அரசு ஆஸ்பத்திரிகளில், நோயாளிகள் நல நிதியிலிருந்து நாப்கின்கள் கொள் முதல் செய்து, இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment