Saturday, November 12, 2011

குடிகார கணவன் தலையில் பாறாங் கல்லைப் போட்டு கொன்ற மனைவி!

தினமும் குடித்து விட்டு வந்து அடித்து கொடுமை செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை உருட்டுகட்டையால் தாக்கி தலையில் பாறாங் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை அருகேயுள்ள பாலு செட் டிசத்திரம் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (48). இவர் குடிப்பழக்கத் துக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் சுற்றித் திரிந்து வந்தார். அந்த வழியில் போவோர் வருவோரையெல்லாம் மிரட்டி பணம் பறித்து வந்தார். மேலும் இவர் மீது அடிதடி வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் இருந்தன.

இவருக்கு நாகம்மாள் (35). என்ற மனைவியும் கதிர் (13), முருகன் (7) என்ற மகன் களும், பவித்ரா (9), காவ்யா (4) என்ற மகள்களும் உள்ளனர். பாலாஜி குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காததால், நாகம்மாள் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பாலாஜிக்கு, கள்ளத் தொடர்பு இருந்ததாக இருந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்ததும் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மனைவி இல்லாத நேரத்தில் கள்ளக் காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார் பாலாஜி. 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்த பாலாஜி, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. மனைவியை பாலாஜி அடித்து உதைத்துள்ளார். பின்னர், திடீரென வீட்டுக்கு தீ வைத்துள் ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆத்திர மடைந்த நாகம்மாள், உருட்டுக்கட்டையால் பாலாஜியை அடித்தார். 

வலிதாங்கமுடியாமல் அவர் வெளியே ஓடி வந்த பாலாஜி மயங்கி விழுந்தார். ஆத்திரம் தீராத நாகம்மாள் வீட்டுக்கு வெளியே கிடந்த பாறாங் கல்லை எடுத்து வந்து பாலாஜியின் தலை மீது போட்டார். முகம் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்த பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சி புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பாலாஜி பரிதாபமாக இறந்தார். 

தகவலறிந்த துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், பாலு செட்டிசத்திரம் ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப் பிரமணியம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகம்மாளை கைது செய்தனர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போதையில் சித்ரவதை செய்த கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment