Wednesday, June 8, 2011

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்

கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன. 200 கோடி திருடின கனிமொழி மட்டும் பாலியல் விமர்சனத்துக்கு உள்ளாவது நமக்குள் இருக்கும் பெண்களை ஒழுக்க குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பார்க்கும் விருப்பத்தை காட்டுகிறது.

ஒரு பெண் தவறு செய்தால் அவளது பாலியல் ஒழுக்கத்தை விசாரணை செய்து தொடர்ந்து அதே மர்மத்தில் தொடர்ந்து தாக்குவது ஒரு பொதுப்புத்தி. இலக்கியம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், இணையத்தில் புழங்கும் பண்பட்ட பன்னாட்டு குமாஸ்தாக்கள் அனைவரிடமும் வேறுபாடின்றி நாம் காண்பது தன்னை மேலாக நினைக்கும் ஒரு சட்டாம்பிள்ளையைத் தான்.
 பண்பாடும், வாசிப்பும், அது சார்ந்த உரையாடல்களும் வெறும் பொழுதுபோக்கோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. முன்பு கற்காலத்தில் இருந்து இரும்புகாலத்திற்கு மனிதன் பரிணமித்தான் என்றால் அது வெறும் இரும்பை பயன்படுத்தினதால் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment