Wednesday, June 8, 2011

கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து; சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் ஆய்வு - ஆளுனர் உரை

தமிழகத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஆளுனர் உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. புது பொது மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.

* மெட்ரோ ரயில் பணிகள் காலதாமதமாவதால், சென்னையில் 111 கிலோமீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படும்.

* சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். நான்கு இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்.

* சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அதன் பாடத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

No comments:

Post a Comment