Thursday, February 10, 2011

பழம்பெரும் நடிகை சாவித்ரிக்கு ஸ்டாம்ப் வெளியிடுகிறது தபால்துறை


பழம்பெரும் நடிகை சாவித்ரிக்கு ஸ்டாம்ப் வெளியிட்டு அவரை கவுரவப்படுத்துகிறது தபால்துறை.

நடிகர் திலகம் என்று பெயர் பெற்றவர் நடிகர் சிவாஜி ‌கணேசன். அதுபோல நடிகையர் திலகம் என்று பெயரெடுத்தவர் சாவித்ரி. இவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி ஆவார். 1950 முதல் 70வரை நடிப்பில் கொடிகட்டி பறந்த சாவித்ரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த "களத்தூர் கண்ணம்மா", "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "நவராத்திரி", உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலம். நடிப்பில் சாதித்த சாவித்ரி சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். சாவித்ரி தன்னுடைய 47வது வயதில் மறைந்தார். இவருக்கு விஜய சாமூண்டேஸ்வரி, சதீஷ் குமார் என இரண்டு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் நடிகை சாவித்ரியை கவுரவப்படுத்தும் விதமாக அவர் பெயரில் ஸ்டாம்ப் வெளியிட, மத்திய தபால்துறை முடிவு செய்துள்ளது. டில்லியில் வருகிற பிப்ரவரி 13ம் தேதி நடக்கும் விழாவில், பிரபல நடிகை வை‌ஜெயந்திமாலா பாலி சாவித்ரியின் ஸ்டாம்ப்பை வெளியிடுகிறார்.  

No comments:

Post a Comment