Monday, February 28, 2011

இணையமும் இந்தியாவும்


இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய இன்டர்நெட் குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 
கூகுள் தேடல் இஞ்சின் இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக அளவில் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 20. 7 கோடி பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் 4 கோடியாகத்தான் உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் உயர்ந்திடும் எனவும் தெரிவித்துள்ளார். 
2007 ஆம் ஆண்டில் இந்திய இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை 2 கோடியாகத்தான் இருந்தது. தற்போது இது 20 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இன்டர்நெட் பயன்படுத்து வோரில் அதிகம் பேர் பாடல்களைத் தான் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதல் .com என்ற துணைப் பெயருடன் தன் இணையதள முகவரியை இந்தியாவில் பதிந்த முதல் நிறுவனம் rediff.com ஆகும். 
இந்தியாவில் 1,80,000 சைபர் கபே மையங்களும், 75 ஆயிரம் சமுதாய சேவை மையங்களும் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன. 
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தேடப்படுவதும், ரயில்வேக்குச் சொந்தமான www.irctc.inஎன்ற தளம் தான். 
84% இணையப் பயனாளர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குச் செல்கிறார்கள்.
இங்கு மொபைல் இன்டர்நெட், பெரும் பாலும் இமெயில் செக் செய்வதற்கும், தகவல்களைத் தேடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.
.com மற்றும் .net துணைப் பெயர் களுடன் இந்தியாவில் 10 லட்சத்து 37 ஆயிரம் தளங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 


No comments:

Post a Comment