Wednesday, January 12, 2011

ஏமாறுவது எங்கள் வாடிக்கை +


*ரயில் பயண சிநேகிதனின் ரகசிய பிஸ்கட் தந்த மயக்கத்தில் பண்ப்பையை பறிகொடுத்து விட்டு ஏமாந்து நிற்போர்




*தொலைக்காட்சியின் விளம்பரம் கண்டு போலி மருந்தொண்று  வாங்கி உண்டு இருந்த உடல் நலத்தையும் இழந்து விட்டு ஏமாந்து நிற்போர்

*பதிவு செய்தால் வேளை என்ற அரசு உத்திரவாதத்தில் மயங்கி பதிவு செய்து வேலை கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்.

*பழைய நகையை பாதுகாக்கும் எண்ணத்தில் முன் பின் தெரியாதவனிடம் பாலிஷ் போட கொடுத்து விட்டு துரும்ப கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை சீட்டுக் காரனிடம் கொடுக்க அவன் அதை சீட்டிங் அடித்து விட அசலே கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*வெளிநாட்டு மோகத்தில், இருந்த ஓர் ஏக்கர் நிலத்தையும் ஏஜெண்டிடம் கொடுத்து விட்டு எந்த ஒரு விசாவும் வராமல் ஏக்கப் பெருமூச்சுடன் ஏமாந்து நிற்போர்

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு  விதத்தில் ஒவ்வொரு நாளும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஏமாற்று பவர்களிடமிருந்து ஏமாறாமல் நாம் தான் உஷார் நிலையில் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment