Monday, November 14, 2011

ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்?

சமீபத்தில் எனது நண்பன் எனக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல்....அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.!!!


இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.
தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.
இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா...அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா?
அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா?
ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.
மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது...இல்லேனா மருவாதை கெட்டிடும்.

No comments:

Post a Comment