Monday, June 13, 2011

பிரிட்டிஷ் கல்வி விசா- அதிரவைக்கும் உண்மை

லண்டன், பிரிட்டன்: பிரிட்டனில் கல்வி கற்பதற்கான விசா வழங்கலில் மிகப்பெரிய அளவு எண்ணிக்கைச் சரிவு ஏற்படவுள்ளது. இதுவரை வழங்கப்பட்டுவந்த கல்வி விசா எண்ணிக்கையிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இரண்டு லட்சத்து முப்பதாயிரம் எண்ணிக்கை குறையவுள்ளது.

பிரிட்டிஷ் ஹோம் மினிஸ்ட்ரியின் புதிய கொள்கையின்படி, ஒவ்வொரு வருடமும் அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரு லட்சம் புதியவர்களே பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதிதாக பிரிட்டனுக்குள் வரும் சகலரும் அடங்குகின்றனர்!

அதாவது, இமிகிரன்ட் விசா, கல்வி விசா, அகதிக் கோரிக்கை என சகல பிரிவுகளையும் இந்த ஒரு லட்சம் எண்ணிக்கைக்குள் அடக்கிவிட நினைக்கின்றது பிரிட்டிஷ் ஹோம் மினிஸ்ட்ரி.

தற்போதைய அரசு பதவியிலிருக்கும்வரை (2011-2015) இந்த நடைமுறையை கடுமையாகப் பின்பற்றுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்தே அடுத்த ஐந்து ஆண்டுகளில் 230,000 குறைவான கல்வி விசாக்கள் வழங்கப்படும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனின் கல்வி விசாவுக்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான மாற்றங்கள்-

• தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவரை ஸ்பான்சர் செய்யும் நடைமுறைகளில் வெட்டுக்கள் வீழ்ந்துள்ளன.

• மாணவர்கள் பகுதிநேர வேலை செய்யும் சட்டங்கள் இறுக்கப்பட்டுள்ளன.

• மாணவர்கள் தமது குடும்பத்தினரைத் தம்முடன் பிரிட்டனுக்கு அழைத்துவரும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டிலிருந்து, வெளிநாட்டு மாணவரின் அபிமானத்துக்குரிய இடமாக பிரிட்டன் இருக்கப்போவதில்லை என்பது நிச்சயம். அதற்குத்தான், வேறு பல நாடுகள் சுலபமான கல்வி விசா நடைமுறைகளை வைத்திருக்கின்றனவே!

No comments:

Post a Comment