Wednesday, June 22, 2011

பகவத் கீதையில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா ?

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாக பகவத் கீதையை நாம் கூற முடியாது. தவ்ராத இஞ்சீல் ஆகிய வேதங்களில்மனிதர்களின் வார்த்தைகள் கலந்து விட்ட போதும் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு அவைவழங்கப்பட்டன என்ற அடிப்படையை அவ்வேதங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் பகவத் கீதை அவ்வாறுவாதிடவில்லை. கடவுளே மனித அவதாரம் எடுத்து அதைச் சொன்னதாக கூறுவதால் அது இஸ்லாம் கூறும் வேதஇலக்கணத்தின் படி அமையவில்லை. 

அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி முன்னறிவிப்புக்கள் உள்ளன என்றெல்லாம் சிலர் பிரச்சாரம்செய்வதையும் கிருஷ்னர் இறைத்தூதர்களில் ஒருவர் என்று உளறி வருவதையும் நாம் ஏற்றுக் கொள்ள் முடியாது.இப்படி வாதிடுவதன் மூலம் இறைவன் இஅறக்கி அருளாத ஒன்றை இறை வேதம் என்று சொல்லி அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிய மாபாதகச் செயலைச் செய்யும் நிலை ஏற்படும். இறைவன் தூதராக அனுப்பியதற்கு ஆதாரம்இல்லாமல் ஒருவரை இறைத்தூதர் என்று கூறினால் அதுவும் பாவச்செயலாக ஆகி விடும். 

இஸ்லாத்தை உண்மைப்படுத்த மெய்யான சான்றுகள் கணக்கின்றி இருக்கும் போது வேதமல்லாத்தற்கு வேதஅங்கீகாரம் கொடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அல்லாஹ்வுன் பெயரால் இட்டுக் கட்டுவோருக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளைப் பின்வரும் வசன்ங்கள்கூறுகின்றன. இந்த எச்சரிக்கைகளுக்கு தக்க பதிலை அவர்கள் கூற முடியுமா என்று சிந்தித்துக் கொள்ளட்டும். 

திருக்குர்ஆன் 6:93 3:94 4:50 6:21 7:37 10:17 10:69 11:18 17:73 29:68

No comments:

Post a Comment