Monday, February 14, 2011

நடிகனாக ஆகியிராவிட்டால் தாதாவாக மாறியிருப்பேன்! - ரஜி​னி



"எந்​தி​ரன்' படத்​திற்​காக எந்​தி​ர​மாய் உழைத்த ரஜினி அதன் வெற்​றி​யால் உற்​சா​க​மாகி இருக்​கி​றார்.​ நடித்​தால் மட்​டுல்ல...​ நின்​றால்,​​ நடந்​தால்,​​ பேசி​னால் கூட ஸ்டைல்​தான் என்​னும் அள​விற்கு ரசி​கர் கூட்​டத்​தின் அபி​மா​னத்​தைப் பெற்ற அவ​ருக்கு தற்​போது வயது 61.​ சென்ற டிசம்பரில்  12ம் தேதி எந்த ஆரா​வா​ர​மு​மின்றி தன்​னு​டைய பிறந்த நாளை​யும்,​​ "அறு​ப​தாம் கல்​யாண'த்தை​யும் சிறப்​பாக கொண்​டா​டி​யி​ருக்​கி​றார் ரஜினி.​ சமீ​பத்​தில் அவர் ஓர் ஆங்​கில இத​ழுக்​குப் பேட்டி அளித்​தி​ருந்​தார்.​ ரஜி​னி​யைப் போலவே விறு​வி​றுப்​பும்,​​ பர​ப​ரப்​பும் நிறைந்த அந்​தப் பேட்டி இதோ.​
​ ​ ​ ​
இப்​போ​தெல்​லாம் பத்​தி​ரி​கை​க​ளுக்கு பேட்​டி​கள் கூட கொடுக்க முடி​யாத அள​விற்கு நீங்​கள் மாறிப் போன​தன் பின்​னணி என்ன?​

நோ நோ...​ நான் மாற​வில்லை.​ அதே ரஜி​னி​தான்.​ இப்​பல்​லாம் நான் யாருக்​கும் பேட்​டி​கள் கொடுப்​ப​தில்லை.​ ஏன்னா பேப்​பர்,​​ சேனல்ஸ் அனைத்​தும் எக்ஸ்க்​ளூ​ஸிவா பேட்டி வேணும்னு கேட்​கி​றாங்க.​ ஒருத்​த​ருக்​குக் கொடுத்து இன்​னொ​ருத்​த​ருக்​குக் கொடுக்​க​லேன்னா மத்​த​வங்க தப்பா நினைப்​பாங்க.​ இதை​விட,​​ எல்​லா​ருக்​குமே நோ சொல்​லிட்டா பிரச்​சினை இல்ல பாருங்க..​ மத்​த​படி மீடியா இன்​னிக்கு ரொம்ப பவர்​ஃ​புல்​லா​யி​டுச்சி...​

"எந்​தி​ரன்' படத்​தின் வெற்றி உங்​களை ரொம்​ப​வும் ரிலாக்​ஸôக்​கி​டுச்சே....!​​

ஓ யெஸ்...​ ஒரு மாநில மொழிப் படத்​தில் முதல் முறையா இவ்​வ​ளவு பெரிய முத​லீடு செஞ்​சி​ருக்​காங்க.​ இது தமாஷ் இல்ல.​ கலா​நிதி மாறன் தைரி​யத்​துக்கு பாராட்​டுக்​கள்.​ அவர் இந்​தக் கதையை நம்​பி​னார்.​ எந்​தத் தப்​பும் நடக்​கலை.​ அது ஒரு பெரிய பொறுப்பு...​ கட​வுள் அரு​ளால எல்​லாம் நல்​ல​ப​டியா நடந்​தது.​

இந்​தப் படத்​திற்கு சம்​ப​ள​மாக ஆரம்​பத்​தில் நீங்​கள் ஒரு பைசா கூட வாங்​க​வில்லை என்று கூறப்​பட்​டதே...?​​

சம்​ப​ளத்தை அப்​பு​றமா கொடுங்​கன்னு நான்​தான் அவங்​க​கிட்ட சொன்​னேன்.​ அப்​பு​றமா வாங்​கிக்​கிட்​டேன் ​(சிரிப்பு)​.​ எனக்கு இப்போ பணம் வேணாம்னு அவங்​க​கிட்ட முதல்​லயே சொல்​லிட்​டேன்.​ எனக்​குத் தேவைன்னா நான் நிச்​ச​யம் கேட்டு வாங்​கிக்​கு​வேன்.​ அப்​படி ஒரு தேவை இல்​லாத பட்​சத்​தில் எதுக்கு ச்சும்மா...​ படத்​துக்​காக ஏற்​கெ​னவே நிறைய செலவு செய்​தி​ருக்​காங்க.​ அது​மட்​டு​மில்​லாம கலா​நிதி மாறன் என்​னோட நல்ல நண்​ப​ரும் கூட.​

நீங்​கள் நடிக்​கும் படம் தயா​ரா​கும்​போது நயா பைசா வாங்​கு​வ​தில்லை என்​றும் அப்​பு​றம் படத்​தின் லாபத்​தில் ஒரு பகு​தியை வாங்​கிக் கொள்​வ​தா​க​வும் சொல்​கி​றார்​களே?​​

உண்​மை​தான்...​

இந்​தி​யா​வில் அதிக சம்​ப​ளம் பெறும் நடி​க​ராக உங்​களை மாற்​றி​யது எது?​​

(சிரிக்​கி​றார்)​

நாங்​கள் சொல்​வது சரி​தானா?​​

மத்த நடி​கர்​கள் எவ்​வ​ளவு வாங்​கு​றாங்​கன்னு எனக்​குத் தெரி​யல!​

​(மீண்​டும் சிரிக்​கி​றார்).
​​

முன்பு ஒரு முறை,​​ "நான் நடி​க​னா​கா​மல் இருந்​தி​ருந்​தால் பணத்​துக்​கா​கக் கடத்​தல்​கா​ர​னாக மாறி​யி​ருப்​பேன்' என்​றீர்​களே...​ நினை​வி​ருக்​கி​றதா?​​

ஆமாம்...​ உண்​மை​தான்...​ நான் ஒரு ​ நடி​க​னாக ஆகி​யி​ரா​விட்​டால் "தாதா'வாக மாறி​யி​ருப்​பேன்.​ ஆனால் அந்​தக் கட்​டத்​தைக் கடந்து விட்​டேன்.​ இப்போது என்​னி​டம் தேவை​யான அளவு பணம் இருக்கு.​

"எந்​தி​ரன்' ரிலீ​ஸூக்​குப் பிறகு இம​ய​மலை சென்​று​விட்​டீர்​களே?​​

ஒவ்​வொரு படத்​தின் ரிலீ​ஸýக்​குப் பிற​கும் நான் இம​ய​ம​லைக்​குப் போவது வழக்​கம்.​ தனி​யா​கத்​தான் செல்​வேன்.​ துணைக்கு யாரை​யும் அழைத்​துச் செல்​வ​தில்லை.​

அங்கே உங்​க​ளைக் காணக் கூட்​டம் கூடி​வி​டாதா?​​

இல்லை.​ நான் ரொம்ப உள்ளே இருக்​கிற இம​ய​மலை கிரா​மங்​க​ளுக்​குப் போவேன்.​ அங்கே இருப்​பதே ஒரு தியா​னம் மாதி​ரி​தான்.​ அந்த கங்கை,​​ புனி​த​மான மலை,​​ அத​னு​டைய அழகு,​​ அங்​குள்ள கள்​ளங்​க​ப​ட​மற்ற மனி​தர்​கள் எல்​லாம் வித்​தி​யா​ச​மா​னது.​ நான் அங்கே பல முறை போயி​ருக்​கேன்.​ 1995ஆம் ஆண்டு தொடங்கி 15 வரு​டங்​க​ளாக போய்க்​கொண்​டி​ருக்​கி​றேன்.​

மகன் இல்​லையே என்று நீங்​கள் எப்​போ​தா​வது வருத்​தப்​பட்​ட​துண்டா?​​

நோ...நோ...​ கட​வுள் ஆசீர்​வா​தத்​தால நான் ரொம்ப சந்​தோ​ஷமா இருக்​கேன்.​ இன்​னிக்கு 21-ம் நூற்​றாண்​டில் இருக்​கோம்.​ ஆண்,​​ பெண் என்​ப​தெல்​லாம் ஒன்​று​மில்லை.​ இன்​னிக்கு என்​னோட ரெண்டு பேரன்​கள் யாத்ரா,​​ லிங்​கா​வைப் பாருங்க.​ ​(பேரன்​க​ளு​டன் ரஜினி இருக்​கும் ஃபி​ரேம் செய்து மாட்​டப்​பட்ட படத்​தைக் காட்​டு​கி​றார்)​

நீங்க நல்ல தாத்​தாவா?​​

யா..​ வெரி லவ்​விங்..​

மற்ற எந்த நட்​சத்​தி​ரங்​க​ளும் செய்​யா​ததை நீங்க செய்​றீங்க.​ குர்தா போடாம,​​ டை கூட அடிக்​காம,​​ இதே வழுக்​கைத் தலை​யோட வெளி​யில வர்​றீங்க.​ உங்க ரசி​கர்​கள் இதை எப்​படி எடுத்​துக்​கி​றாங்க?​​
 
ஸ்க்​ரீன்ல நான் எப்​ப​டி​யி​ருக்​கேன்​கி​ற​து​தான் அவங்​க​ளுக்கு முக்​கி​யம்.​ அதுக்​கு​தான் அவங்க பணம் செலவு பண்ணி பாக்​க​றாங்க.​ அவங்​க​ளுக்கு தங்​க​ளோட ஹீரோ பக்கா ஹீரோவா இருக்​க​ணும்.​ வெளி​யில எப்​படி இருந்​தா​லும் கவ​லைப்​பட மாட்​டாங்க.​ மக்​கள் புத்​தி​சா​லி​கள்.​ அவங்​க​ளுக்கு எல்​லாம் தெரி​யும்.​ எதுக்​குத் தேவை​யில்​லாம நம்மை நாமே சங்​க​டப்​ப​டுத்​திக்​க​ணும்?​​

நீங்க நீங்​க​ளாவே இருக்​கி​றதை அவங்க பாராட்​டு​றாங்க இல்​லையா?​​

அது இயல்​பு​தானே...​ ஆனா சினி​மா​வுல இப்​ப​டியே வந்தா அவங்க விரும்ப மாட்​டாங்க.​ நிஜத்​துல ஓ.கே.​ சினி​மா​வுல அவங்​க​ளுக்கு ஹீரோ​தான் தேவை.​

இன்​னும் உங்​களை ஆக்​டிவ்வா வைச்​சி​ருக்​கி​ற​துக்கு என்ன கார​ணம்?​​

நான் யோகா, எக்​ஸர்​சைஸ் பண்​றேன்.​ இது​தான் என் மூல​த​னம்.​ ஒரு ஆர்​டிஸ்ட்​டுக்கு இந்த மூல​த​னம் ரொம்ப முக்​கி​யம்.​ ஆனா மனசை ஃபிட்டா வச்​சிக்க நல்ல எழுத்​தா​ளர்​கள்,​​ இயக்​கு​நர்​கள் இருக்​காங்க.​

"எந்திர'னில் நீங்​கள் எல்​லாம் செய்​தீர்​கள்.​ ஒரு இளம் நாய​கி​யு​டன் காதல் காட்​சி​க​ளில் நடித்​தீர்​கள் என்​றா​லும் வய​தா​கி​றதே என்ற மன அழுத்​தத்தை உணர்​கி​றீர்​களா?​​

​(மனம் விட்டு சிரிக்​கி​றார்)​ சில நேரங்​கள்ல சண்​டைக் காட்​சி​க​ளில் நடிக்​கும்​போது,​​ டான்ஸ் பண்​ணும்​போது வய​சான ஃபீல் வரும்.​ வய​சா​கி​றது நிஜம்​தானே...?​ ஆனா டெக்​னீ​ஷி​யன்​கள்,​​ டைரக்​டர்​க​ளுக்​கும் தெரி​யும்.​ அவங்க மேனேஜ் பண்​ணி​ட​றாங்க.​ காதல் காட்​சி​கள்ல நடிக்​கும்​போது எனக்கே கொஞ்​சம் சங்​க​ட​மாத்​தான் இருக்கு.​ நடிப்​பு​தா​னேன்னு சொன்​னா​லும் கொஞ்​சம் சங்​க​டமா இருக்கு.​

"எந்​தி​ரனு'க்கு அப்​பு​றம் என்ன?​​

ஒரு அனி​மே​ஷன் படம்.​ "ஹரா'ன்னு தலைப்பு.​ ஒரு பாதி அனி​மே​ஷன்,​​ மீதி பாதி லைவ்.​ ​ "அவ​தார்' மாதிரி.​ ஆனா முழுசா ஒரு ரஜி​னி​காந்த் படம் கொடுப்​பது பற்றி இன்​னும் முடி​வெ​டுக்​கல.​

யாஷ் சோப்ரா உங்​களை "தூம் 3' படத்​தில் நடிக்​கக் கூப்​பிட்​டதா சொல்​றாங்​களே?​​

அது முழுக்க முழுக்க வதந்​தி​தான்.​ என்னை அவங்க அப்​ரோச் பண்​ணல.​ எனிவே...​ "ஹரா' முடிஞ்ச பிறகு 6 மாச​மா​வது எனக்கு இடை​வெளி தேவை.​ எனக்​குப் பொருத்​த​மான நல்ல கேரக்​டர்,​​ ரோல் கிடைச்சா...​ நல்ல தயா​ரிப்​பா​ளர்,​​ இயக்​கு​நர்​கள் அமைந்​தால்...​ நிச்​ச​யம் அடுத்த படம் பண்​ணு​வேன்.​ இல்​லேன்னா போதும்...​ இப்ப எனக்கு 61 வயசு ஆயி​டுச்சு!​''​

அமி​தாப் இப்​ப​வும் நடிக்​கி​றாரே?​​

அவர்​தான் எனக்கு முன்​னு​தா​ர​ணம்...​ ஆக்​சு​வலா திலீப்​கு​மார்​தான் எங்​க​ளுக்​கெல்​லாம் மையப் புள்ளி.​ அமித்ஜி,​​ நான்,​​ ஷாரூக்,​​ அமீ​ருக்​கெல்​லாம் திலீப்​கு​மார்​தான் இன்ஸ்​பி​ரே​ஷன்!​​

உங்​க​ளுக்கு மும்பை காற்று மீது அலா​தி​யான காதல் இருக்​கி​றது.​ அதை இப்​போது கொஞ்​சம் இழந்​து​விட்​ட​தாக உணர்​கி​றீர்​களா?​​

அமி​தாப் போன்​ற​வர்​க​ளோடு நெருக்​க​மா​கப் பழ​கிப் பேசும் வாய்ப்பு எத்​த​னைப் பேருக்​குக் கிடைக்​கும்?​ நான் ரொம்ப அதிர்ஷ்​டக்​கா​ரன்.​ நானும் அமி​தாப்​பும்,​​ "அந்தா கானூன்',​ "கிரா​ஃப்​தார்',​ "ஹம்னு' என்று மூன்று படங்​க​ளில் சேர்ந்து நடித்​தோம்.​ மூணுமே சூப்​பர் டூப்​பர் ஹிட்ஸ்!​ சில நேரங்​கள்ல மும்​பைக்கு போய் நண்​பர்​க​ளைப் பார்க்​க​ணும்னு தோணும்.​ அங்கே சுபாஷ் கய்,​​ சன்னி தியோல்,​​ ரிஷி கபூர்,​​ ஜித்​தேந்​திரா என்று எனக்கு நிறைய நண்​பர்​கள் இருக்​கி​றார்​கள்.​

ஏன் ஹிந்​திப் படங்​க​ளில் நடிப்​பதை விட்​டுட்​டீங்க?​​

அதை நானா​கத்​தான் குறைச்​சிக்​கிட்​டேன்.​ இங்கே ரெண்டு வரு​ஷத்​துக்கு ஒரு படம்​தான் பண்​றேன்.​ ரெண்டு குதி​ரைல ஒரே நேரத்​துல சவாரி பண்​றது கஷ்​டம்.​ ஹிந்​திப் படங்​க​ளில் வேலை பாக்​கு​ற​துக்​கும்,​​ தெற்​கில் பணி​யாற்​று​வ​தற்​கும் நிறைய வித்​தி​யா​சம் இருக்கு.​ அங்கே போது​மான அளவு செஞ்​சிட்​டேன்.​ ஹிந்​தி​யில கிட்​டத்​தட்ட 25-27 படங்​கள் பண்​ணிட்​டேன்.​ அங்கே 10 வரு​ஷம் வொர்க் பண்​ணி​யி​ருக்​கேன்.​ அந்த வாழ்க்​கையை அனு​ப​விச்​சேன்.​

உங்​க​ளைப் பற்​றிய மக்​க​ளின் எதிர்​பார்ப்பு அதி​க​மாக இருக்​கி​றது.​ அதற்கு என்ன செய்​யப் போகி​றீர்​கள்?​​

அவங்க எதிர்​பார்ப்பு அதி​கம்​தான்.​ படத்​துக்​குப் படம்,​​ அடுத்து வித்​தி​யா​சமா என்ன செய்​ய​லாம்​கிற பொறுப்​பு​தான் பெரிய அழுத்​தம்.​ அடுத்து என்ன பண்​றது?​ எப்​படி பெரிசா பண்​றது?​ அந்​தப் படம் வித்​தி​யா​ச​மா​க​வும் இருக்​க​ணும்.​ பொழுது போக்​கா​க​வும் இருக்​க​ணும்.​ ரொம்ப உப​தே​சம் பண்ற மாதி​ரியோ,​​ ​ ஆர்ட் ஃபி​லிம் மாதி​ரியோ இருக்​கக்​கூ​டாது.​ அவார்ட் படம் மாதிரி இருக்​கக்​கூ​டாது.​ ஆனால் நல்ல தர​மான பொழு​து​போக்​குப் படமா இருக்​க​ணும்.​ அதுக்​காக ரொம்ப சீப்பா இருக்​கக் கூடாது.​ அந்த வகை​யில் "எந்​தி​ரன்' நல்ல பொழு​து​போக்கு படம்.​ வித்​தி​யா​ச​மான பரி​மா​ணம்.​

"எந்​தி​ரன்' படத்​தில் முத​லில் ஷாருக்​கான் நடிக்​க​வி​ருந்​தார்.​ அது கைவி​டப்​பட்டு நீங்​கள் நடித்​தீர்​கள்.​ இதை எப்​படி எடுத்​துக் கொண்​டீர்​கள்?

இந்​தக் கதை முத​லில் கம​லுக்​குப் போனது.​ ப்ரீத்தி ஜிந்​தாவை ஹீரோ​யி​னாக நடிக்க வைக்க முடிவு செய்து பூஜை கூடப் போட்​டார்​கள்.​ ஆனால் கால்​ஷீட் பிரச்​சினை என்று நினைக்​கி​றேன்.​ படம் ட்ராப் ஆகி​விட்​டது.​ அப்​பு​றம் ஷாரூக்​கி​டம் போனது.​ அங்கே பட்​ஜெட் பிரச்​சி​னை​யா​கி​விட்​டது.​ அத​னால் அவர் நடிக்​க​வில்லை.​ பிற​கு​தான் நான் நடிக்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டது.​ ​

நீங்​கள் நடித்த "சிவாஜி' பட​மும் நன்​றாக ஓடி​யதே?​

ஆமாம்.​ முதல் முறையா 75 முதல் 80 கோடி வரை ஒரு மாநில மொழிப் படத்​துக்கு செல​வ​ழித்து,​​ அதில் 110 முதல் 120 கோடி வரை லாபம் பார்த்​தாங்க.​ அது ரொம்ப உற்​சா​கம் தந்​தது.​ என்​னு​டைய மார்க்​கெட்​டை​யும் விரி​வு​ப​டுத்​துச்சி.​

"எந்திரன்' படம் கமல்,​​ ஷாரூக்​கா​னி​டம் போய்​விட்டு வந்​ததே என்ற ஈகோ உங்​க​ளுக்கு இல்​லையா?​​
"ஈஹ​ஹய்ங் க்ஹ​ஹய்ங் டங் ப்ண்ந்ட்ஹ ட்ர்ற்ஹ ட்ஹண் ஓட்​ஹ​ஹய்ங் ஜ்ஹப்ங் ந்ஹ ய்ஹ​ஹம்!​'​ ​(ஒவ்​வொரு தானி​யத்​தி​லும் அதை உண்​ணப் போகி​ற​வ​ரின் பெயர் எழு​தப்​பட்​டி​ருக்​கும்)​.​ ஷங்​கரை எனக்​குத் தெரி​யும்.​ அவ​ரின் திற​மை​கள் பற்​றித் தெரி​யும்.​ அத​னால்​தான் ஒப்​புக் கொண்​டேன்.​ வேறு யாரா​வது வந்து ரூ.200 கோடி​யில படம் எடுக்​க​றதா சொல்​லி​யி​ருந்​தால் நான் தொட்​டி​ருக்​கக் கூட மாட்​டேன்.​ ஷங்​கர் சரியா செய்​வாரு.​ நல்ல படம் தரு​வார்னு எனக்​குத் தெரி​யும்.​ ஹாலி​வுட்​டில் இருந்து வந்து கேட்​டி​ருந்தா கூட நான் ஒத்​துக்​கிட்​டி​ருக்க மாட்​டேன்.​ "சிவாஜி'யில சேர்ந்து வேலை செஞ்​ச​துக்​கப்​பு​றம் ஷங்​கர் ஃபென்​டாஸ்​டிக் டைரக்​டர்னு தெரிஞ்​சிக்​கிட்​டேன்!​''

நீங்​கள் நடித்த "குசே​லன்' படம் சரி​யாக ஓட​வில்​லையே?​​

அது ஒரு நாலஞ்சு நாள் வேல.​ கெஸ்ட் ரோலில்​தான் நடித்​தேன்.​

ஒரு படம் சரி​யாக ஓட​வில்லை என்​றால் ரொம்​ப​வும் வருத்​தப்​ப​டு​வீர்​களா?​

நிச்​ச​ய​மாக.​ ரொம்​ப​வும் கஷ்​ட​மாக உணர்​வேன்.​ பல பேரு​டைய பணம்,​​ நம்​பிக்கை.​ அது தோற்​றால் என்னை ரொம்​பவே பாதிக்​கும்.​ அதுல எனக்​கும் பொறுப்​பி​ருப்​பதா உணர்​வேன்.​ மக்​கள்,​​ ரசி​கர்​கள் எல்​லோ​ரும் இந்த ரஜினி மீது வைக்​கும் நம்​பிக்கை தோற்​கும்​போது ரொம்​பவே பாதிக்​கும்.​

1 comment:

  1. அதான் அவர் தா(த்)தா ஆயிட்டாரே.

    ReplyDelete