Thursday, January 13, 2011

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

              குண்டு  தலைப்பே பதிவின் கனத்தை உரைத்திருக்கும் அனால் இது தலைப்பிற்கு ஏற்ப கனம் உடையதா அல்லது மொக்கையா என தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

எதற்கும் கீழே உள்ள காளோளியை ஒரு தடவை பார்த்தீர்களானால் இதன் கனத்தை தங்களுக்கு இலகுவாக்க முடியும் எனக் கருதுகிறேன்.
           கதிர் வீச்சு சம்மந்தமாக எனது முன்னைய பதிவான வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? ஐச் சொடுக்கி வாசிக்கலாம். அதிலேயே சோளத்தின் கதிர் வீச்சை விபரித்துள்ளேன். ஏற்கனவே ஐ போன் வெடிப்பு சம்மந்தமாக பல புகர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள் அதன் ஒரு வெளிப்பாடு தான் இப்பதிவு


செய்முறை
ஒன்றுமே தேவையில்லை ஒரு கோயிலுக்குச் செல்லவும். கச்சான் ஆச்சியிடம் ஒரு பத்து ரூபாய் கொடுத்து ஒரு சோளச்சரை வாங்கவும் அதன் பின்னர் அந்தப் பையினுள் ஒரு ஐ போனை போட்டு வடிவாகக் குலுக்கவும் அவ்வளவும் தான் அதன் பின் அதை சிணிங்க வைத்தால் போதும் படார் என வெடிக்கும் அம்புட்டும் தான் (இப்படி ஒரு குண்டை தயாரிப்பதற்கு ஐம்பதாயிரத்தி பத்து ரூபாய்க்கு மேல் செலவளிக்கணுமா எனக் கேட்டால் சோத்துச் சங்கம் பொறுப்பேற்காது)

ஆதாரம் - மேலுள்ள காணொளி

ஆனால் இதன் பின்னே பல மறைமுக ஆரம்பங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது எடுத்துக்காட்டாக நியூட்டனுக்கு ஆப்பிள் விழுந்த கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே மேலே சோளம் வாங்கும் கோபியை பற்றி கீழே சுபாங்கன் குற்றத்தடுப்புப் பிரிவிற்கு பகிரங்க மடல் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏம்பா நமக்கு வீண் வம்பு. 
பட(பாடை) உதவி வம்பு லோசனன்

            என்ன கடுப்பாயிருக்கா என்ன செய்வது இது மொக்கையென்று நினைத்தால் மொக்கை தான் அதே போல் ஒரு அறிவியல் பதிவு என நினைத் தால் அறிவியல் தான் எல்லாம் உங்க மனம் தான் தீர்மானிக்கணும் நான் என்ன செய்யலாம். என்னை அவசரகாலத் தடைச்சட்டத்தில் கைது செய்ய முனையலாம் அதனால் எனது புளொக்கை யாரும் காட்டிக் கொடுத்து விடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் யாரும் எனக்கு வாக்கிட வேண்டாம் காரணம் இந்த ஆக்கம் publish ஆனால் எனது வாழ்க்கை டுப்பிலிஸ் ஆக்கிவிடும் (இப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கவா போறிங்க பாசக்கார பய புள்ளைக என்னவேணுமன்னாலும் பண்ணிக்கோங்கோ)


No comments:

Post a Comment