Wednesday, December 15, 2010

Google க்கு எமனாகும் FaceBook

இணைய உலக சூப்பர் ஸ்டார் கூகிள் மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக், இந்த இரண்டு இணையதளங்கள் சண்டை தான் இப்போதைய சூடான செய்தி. ஆம் சமீபகாலமாக அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக் மேல் ஒரு கண்ணாகவே இருந்து வந்தது கூகிள். ஃபேஸ்புக்கின் வளர்ச்சியை
கண்டு சற்று கடுப்பாகவே இருந்து வருகிறது கூகிள். போத குறைக்கு கூகிளில் வேலை செய்து வந்த சில முன்னணி மற்றும் பிரபல பணியாளர்களை ஃபேஸ்புக் தங்கள் வசமாக இழுத்துவிட்டனர். ஃபேஸ்புக்கின் அதித வளர்ச்சி தான் கூகிளின் ஒர்குட் மற்றும் பஷ் (buzz) போன்ற சேவைகளின் தோல்விக்கு காரணம் என எண்ணுவதால் கூகிளுக்கு ஃபேஸ்புக்கிற்க்கு ஜென்ம
எதிரி போல் இருக்கிறது.

தனது பணியாளர்கள் ஃபேஸ்புக்கிற்க்கு செல்வதை தடுப்பதற்க்காக கூகிள் தனது பணியாளர்களுக்கு சில சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் உலகம் முழுவதுமுள்ள பணியாளர்களுக்கு (சுமார் 23000 பேர்) 10% ஊதியத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வர இருக்கிறது. இதை கூகிளின்
சிப் எக்ஸிகுடிவ் Eric schmidt அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வை ரகசியமாக வைக்க எண்ணிய கூகிளிற்க்கு அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று இந்த அறிவிப்பை, Eric schmidt ன் இமெயில் காப்பியுடன் வெளியிட்டது. அனைத்திற்கும் காரணம் ஃபேஸ்புக் தான் என்ற கடுப்பில் கூகிள், ஃபேஸ்புக்கிற்க்கான தனது
தாக்குதலை தொடங்க ஆரம்பித்திருகிறது. முதல் தாக்குதலாக ஃபேஸ்புக் கூகிளின் ஜிமெயில் கணக்குகளை தரவிறக்கும் சேவையை (Gmail contact API) தடை செய்தது. இதற்கு பதிலாக ஃபேஸ்புக் வேறு வழியாக ஜிமெயில் கணக்குகளை தரவிறக்க வழி செய்தது. அதற்கும் இப்பொழுது கூகிள் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர் அவர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து நண்பர்களின் கணக்குகளை ஃபேஸ்புக்கிற்க்கு எடுக்கும் போது, அவர்க்களுக்கு கீழே உள்ள பக்கம் தெரிகிறது. இதன் மூலம் ஃபேஸ்புக்கிற்க்கு கிடைக்க இருக்கும் புதிய பயனாளர்கள் குறைய கூடும் என கூகிள் எதிர்ப்பார்க்கிறது.

No comments:

Post a Comment